Saturday, July 31, 2010

அழியும் ஒரு நாள் நிலவு - அன்றே நானும் கூட!

உன்னை என்றுமே
மறக்கப் போவதில்லை !!
 
என்று நான் எத்தனை
பொய்க்கவிதை எழுதினாலும்
நீ படித்துவிட்டு பிடித்திருக்கிறது
என்று தான் சொல்லப்போகிறாய்!
 
இப்போதாவது நிசம்
என்னவென்று கேள்! !
 
உன்கூடவே இருக்கவேண்டும்
என்ற என் ஆசை ஒன்றும்
கடைசி வரைக்கும் இல்லை அழகி ! !
 
நாளை, நிலவும் சூரியனும் வானிற்கு
அழகு சேர்க்கப் போவதில்லை
என்று சேதி வரும் நாள் வரைக்கும் மட்டுமே!!
 

4 comments:

  1. படைப்புகள் அனைத்தும் அருமை

    ReplyDelete
  2. கவிக்குயிகளுக்கு நன்றி..!!

    ReplyDelete
  3. அன்பு நண்பருக்கு,
    வணக்கம்.
    படைப்புகள் அருமையாக உள்ளது. அதே நேரத்தில் வலைப்பதிவை மிக அருமையாக உள்ளது.
    நன்றி.
    அன்புடன்
    சகோதரன்.

    ReplyDelete
  4. மூப்பனார் சமூக நண்பருக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete