Tuesday, August 3, 2010

உதவாக்கரைக் காதலன்

ஒன்றை  .,
எதற்குமே உதவப்போவதில்லை 
என்று தெரிந்திருந்தும் ,
சிலசமயம் "அது வேண்டும் " என்று 
குழந்தைத்தனமாய் கேட்பாய்..!

நன்றி அழகி !

உன் குழந்தைத் தனத்தினால் 
வாழவைக்கப்பட்ட பலவற்றுள் 
நானும் ஒருவன்!

என்னையும் நீ அப்படித்தானே 
கேட்டாய்!
" பிரபா., நீ வேண்டுமென்று ! "


1 comment:

  1. சாவடிக்கிற பிரபா... :-)

    ReplyDelete