Sunday, July 18, 2010

அந்த ஒரு நிமிடம்

அந்த ஒரு நிமிடம் !
சாத்தியம் தான் 
என்று என்னோடு 
சண்டை போடுகிறது  மனம் ! 

நம்மை சுற்றி இருக்கும்
உலகம் இன்னும் அழியத்
தொடங்கவில்லை!

நம் இதயம் ஓய்ந்து 
நிற்கப்போகும் நொடியும் 
ஒன்றும் அருகிலில்லை!

இப்பவும் உன் கண்களைப் 
பார்த்த நொடியில் 
அழுகை வரும்!

அடுத்த நொடியிலேயே 
என்னை சிரிக்க வைக்க 
உனக்கும் தெரியும் ! 

ஒருகையில் என் கண்களைத் 
துடைத்துக்கொண்டு 
மறுகையால் உன் 
கைகளைப் பிடித்துக் கொண்டு,

உன்னைக் காதலிக்கிறேன் என்று
சொல்வதற்கு நேரமிருக்கிறது!

"நீதான் இல்லை"

"எல்லாம் இருந்தும் எதுவுமில்லை " 
என்ற பழமொழிக்கு .,
அர்த்தம் தெரிய வைத்தமைக்கு
 நன்றி! அழகி ! 







No comments:

Post a Comment