Sunday, August 29, 2010

அன்பிற்கும் உண்டாம் அடைக்கும்தாழ்

பிறவிப்பயனை பெறாமல் நோகும்   
என் ஆட்காட்டி விரலில் - சுட்டி 

அழகி இவள்தான் ,
என் அழகி இவள் தான் என்று 

கேட்கிற அனைவரிடமும் 
சொல்லி மகிழ வேண்டும் 
போல இருக்கிறது ..

ஆனால் உன்
அன்புக்கட்டளைக்குள் 
அடைபட்டுக் கிடக்கிறேனே
அழகி .,

ஏன் ? நீ என் ' பொண்டாட்டி ' 
என்பதைத் தவிர 
வேறு எதையும் யாரிடமும் 
சொல்ல வேண்டாம்
என்று தடுக்கிறாய் ?

ப்ச்ச்ச் ....!!! போடி  .!

 ஒன்று மட்டும் நிச்சயம் அழகி !

இயற்கையின் அழகிற்கு ...
 நம் காதல் - 
ஒரு முன்னேற்ற மயில்கல்.!

ஊருக்கு சொல்லமுடியாமற் போன   
நம் அன்பின் உன்னதமோ 
இயற்கையின் அழகை 
குறுக்கிட்டு மறிக்கும் 
 மதில்சுவர் தடங்கல் ..!!


5 comments: