Friday, October 2, 2009

லவ் லெட்டர் # அத்தியாயம் ஒன்று !




என் கறுப்பு இரவுகளை ர் கனவுகளில் நனைத்தவள் நீ! தண்ணீருக்குள் அழுதழுதே பழகிப்போன என் கண்ணீர் துளிகளுக்கு உறைவிடம் தந்து ஆறுதல் சொன்னவள் நீ!! கற்பனையில் கூட சாத்தியப்படாத இந்த உறவை அத்தனை உண்மையாக்கி உயிர் செய்தவள் நீ!! எதையும் என்னிடம் இருந்து எதிர்பார்த்ததில்லை ! ஆனாலும் கொடுத்து கொண்டே இருக்கிறாய் ..!! எல்லையில்லாத ஈடு இணையற்ற உன் அன்பை !! அதுதான் நீ !! உன் இதய ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் அத்தனை ரகசியங்களையும் என் செவிகளுக்கு விருந்தாக்க மறந்ததில்லை நீ!! சுகமகிழ்வுகள், சோகங்கள், சிலசமயம் கோபங்கள் , பைத்தியக்காரத்தனங்கள் !! இத்தனையும் பகிர்ந்திருக்கிறோம் நாம்...!! விதி நம்மை சேர்த்த விதம் வியப்பின் உச்சம் அழகி!! நாட்கடிகாரம் தொடங்கும் முன்னரே உன் நினைவோடு சுற்ற தொடங்கிடுது என் நிழல்கள்!!  இத்தனையும் நினைத்து பார்த்து சிலிர்க்கிற நொடிகளில், உன் பிரிவின் நினைவும் ஏனோ குறுக்கிட்டுத் தொலைக்கிறது...!! உன்னில் பின்னிக்கொண்ட என் விதியை மீட்க வழியிருப்பினும் மனமில்லையே என்னிடம்!! செத்துப்போன என் கண்ணீருக்கு ஏன் மறுபிறவி கொடுத்தாய்?? உன் அழுகையால்.!!! யார்க்கும் தராத அழுகையை ஏன் எனக்காக பரிசாக்கினாய்??! நீ எத்தனை முறை என்னை அழ வைத்தாயோ அத்தனை முறைக்கு மேல் ஒருகோடி தடவை நினைத்திருக்கிறேன் உன்னை சிரிக்க வைக்க என்ன செய்வதென்று??!! அதுசரி ! எதிர்பாராது மழை எதிர்பாராமலே பெய்து ஓய்ந்திடுமே... அது போல் நீயும் எனை தவிக்கவிட்டு சென்றிடாதடி சகி ... நீயில்லாத நொடிகளில் நெருப்பிலிட்ட காகிதமாய்த்தான் எரிகிறது என் இதயம்!! இன்று , நொடிஎங்கும் என்னுள் நிறைந்து கிடப்பது உன் பிரிவின் நினைவு மட்டும் தான் !! என்ன நினைக்கிறதோ இப்போழ்து உன் மனம் ? அதை கண்டிப்பாய் நான் மாற்ற முடியாது...!! வேண்டுமானால் என் சட்டைக் காலரை பிடித்து கொண்டு என்னை நானே கேட்டுக்கொள்ள வேண்டியதுதான் !! ஏன் நீ என்மேல் இவ்வளவு அன்பு வைத்தாய் ? ஏன் நான் உனக்குமேல் உன்னிடம் அன்பு வைத்தேன்??!!  எது எப்படியோ , சேமித்து வைத்திரு உன் செல்லச்சிரிப்பினை ! செத்தாலும் கேட்பேன் உன் சின்னகனவுகளில் தினம் நுழைந்து...!!  நீ அப்பிவிட்டுப் போன அத்தனை இன்பக் கலர்களோடே இன்றும் ஜொலித்துக் கொண்டிருக்கும் உன் இனிய நண்பன் பிரபா ...!! 
 Love you so much

No comments:

Post a Comment