Tuesday, August 17, 2010

அன்புக்கோழை -அழகியின் நினைவில்

 அழுகிற முகமெலாம்
கோழைத்தனத்தின் முகவரி தான்!
யார் இல்லையென்றது ? 

நாம் அருகிலிருந்த நொடி எல்லாம் 
காற்றில் தூசியாகி கைவிட்டே போய்விட்டது.!
நகர்கிற நிசிகளில் தூக்கமென்பது 
தொடரும் பகல் கனவாகி விட்டது.!

தொலைவுகள் கடத்திசென்ற அழகியின் குரல் 
அரைமாதத்திற்கு  ஒருமுறை கேட்கிறது!
"கிறுக்கா.! .....
என்று தொடங்கும் அந்த வீணையோசை
எனக்கே தெரியாமல் என் கண்களை அறுத்து
இதயத்தை கோழையாக்கிவிடுகிறது..!!!

ஆம்.!
அழுதுவிட்டேன்! அன்புக்கோழை .!
என்னசெய்ய நான் ?

உப்புக்கண்ணீரும்  உனக்காக அழும்போது
இனிக்கத் தானே செய்கிறது! அழகி!
 

6 comments:

  1. migavum arumai thambi.....by theeyasakthi

    ReplyDelete
  2. Nanba.,

    Migavum arumaniyaga erukindrathu.,
    menmellum valara Valththukal..

    -Karthi

    ReplyDelete
  3. Ungalin Ungalakku pediththa Kavithai ethuvendru ariya Aval..

    Pathilai etherparkiren..

    -Ungal nanban
    Karthi

    ReplyDelete
  4. //அழுகிற முகமெலாம்
    கோழைத்தனத்தின் முகவரி தான்!//

    அப்படி பார்த்த எல்லா காதலர்களும் கோழைகள் தான்....ம்ம்ம்ம்ம்ம்...இது நிரம்பப உண்மைதான்.....

    ReplyDelete
  5. //உப்புக்கண்ணீரும் உனக்காக அழும்போது
    இனிக்கத் தானே செய்கிறது! அழகி! //

    ம்ம்ம்ம்.... நல்லா அனுபவிச்சு எழுதுறீங்க..........

    ReplyDelete