Sunday, March 25, 2012

என்னை அவ்வளவு பிடிக்குமோ ?


எத்தனையோ வழிகளில்
எனக்குள் வந்து நிறைகிறாய் நீ 
உன்னைத் தடுத்து நிறுத்தினால் 
தான் என்ன ஆகிவிடப்
போகிறேன் நான் ?
யோசித்தேன் ....
 தலையணை எடுத்தேன்
முகத்தில் கிடத்திப் புதைத்தேன்  
நிசப்தத்தில் திணறிக் கிடந்தேன் 
ஓரிரு நிமிடம் கடந்திருக்கும்...
     
உன்  ஒட்டுமொத்த ஆற்றலையும் 
திரட்டி எத்தனை  வீரியமாய்
என் கைகளைப் தட்டிவிட்டுத்
தலையணை தூக்கி எரிந்து 
எனக்குள் வந்து நிறைகிறாய்!

என் மூச்சே , 
என்னை அவ்வளவு 
பிடிக்குமா உனக்கு ?
 

8 comments:

  1. கற்பனையும் பதிவும்
    மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. செம கற்பனை.. நல்லா இருக்கு பாஸ்...

    நட்புடன்
    கவிதை காதலன்

    ReplyDelete
  3. @ ரமணி ஜி :) நன்றி நன்றி ! :)

    ReplyDelete
  4. கவிதை காதலன் : நன்றி :)

    ReplyDelete
  5. I love u so much da, do u????????

    ReplyDelete
  6. # kirukki : Adade..... yaarunga idhuuu ?? Thanks alot... Love you too <3

    ReplyDelete