Sunday, April 4, 2010

மடியினில் முடியட்டும் மரணநொடி

உன் அன்பு பேசும் மொழிகளை
என்னோடு பகிர்ந்துகொள் !

என்னோடு உனைசேர்த்த
வாழ்வொன்றை நினைத்துப்பார் !
ஒருநொடியில் சிறுகனமாவது .!!

களவு போகாமல் பத்திரபடுத்திவை -
என்னை பைத்தியமாக்கிய  உன்
கண்களின் நட்சத்திரத்தை !!

எப்படியேனும் தொலைத்துவிடு
என்னை கலங்கவைத்த உன்
கண்ணீர் துளிகளை !!  

தனிமைக் கரைக்கு வந்துவிடு -
என்னோடு கைகோர்த்து கால்நனைக்க!!

புது அர்த்தம் தேடிக்கொடு ,
பழைமை மாறாத என் இன்பங்களுக்கு !!

எந்நேரமும் பிரிந்திருந்து
என்னசெய்ய போகிறது பாவம் !
இணைத்து வைக்க உதவி செய் .,
நம் இரு கைகளையும் .,



கோடி துன்பங்களும் 
கால் தூசி தான்-
உன் மூச்சுக்காற்று என்னை 
முத்தமிடும் போது ..!!

அழவை ,அசிங்கப்படுத்து ,
ஆத்திரப்படுத்து , இன்னும் செய்துகொள்
என்னவேண்டுமோ ..!

எத்தனை செய்தாலும்
மறக்காமல் வைத்திரு!
என் மரண நொடிகளில்
உன் மடியினை கடன்கேட்க
வருவேன் !!

No comments:

Post a Comment