Friday, April 30, 2010

சாய்ந்துபோன இதயஉணர்வுகள்

கனவினில் உன் மடிகிடைத்துத்
தூங்கிய போது ,
நான் உளறிய வார்த்தைகள் யாவும்
கவிதைகளாகி இருந்தது ..!

கையினில் விரல்கோர்த்து நீயென்
மடிசாய்திருந்த போது-நான்
உளறத் தொடங்கும் முன்பே
உதிரத்தில் நனைந்துவிட்டது
கண்கள் !!

ரத்தமும் கண்ணீரும் 
சப்தமின்றிக் கசிந்துகொண்டிருப்பது 
சுகமோ? துக்கமோ ?
தெரியவில்லை ..!

எதுவாய் இருந்தாலும்
எல்லாவற்றிற்கும் உன் பெயரையே
காரணமாக்கி மகிழ்கிறேனடி !

என்மடியில் நீசாய்ந்த நொடியிலேயே
சாய்ந்து விட்டதடி! -
உன்பக்கமாய் என்னுயிரும் !


இன்று 
எத்தனை வாய்ப்பு கிடைத்த போதும் !
என் அத்தனை 
உணர்வுகளையும்  வார்த்தைகளாக்கும்
தமிழ் இல்லையேடி என்னிடம் ..!!

1 comment: