Sunday, August 16, 2009

கனவிலும் தொலைவு - காதல்


மழை மேகமும் இல்லை ,
அனல் வெயிலும் இல்லை ..!!
வந்து சேர்ந்த இரவில்
வழக்கம் போலவே வரவில்லை
தூக்கம் ..!
பூமியில் எந்த ஒரு மணிக்காட்டியும்
இப்படிச் சுழன்றதில்லை .!
அத்தனை விரைவாய் சுற்றியது
என் வீட்டுக் கடிகாரம்..!
இருள்விலகத் தொடங்கியதும் எப்படியோ
இமைகளை சூழ்ந்து கொண்டது
உறக்கம் ..!!
தூக்கம் தொடங்கியதுமே
துளிர் விடத்தொடங்கியது
கனவு ...!!
நேற்று ஏதோ மெல்லிடை பெண்ணொருத்தி
என் முழு கனவையும் ஆக்கிரமிதிருந்தாள் ..!!
எந்த ஒரு பெண்மையும்
எளிதில் பேசத்துனியாத
வார்த்தைகளை
என்னோடுபேசியிருந்தால்
அவள்..!!!
கனவிலும் நடந்திராத காதல்
நடந்து முடிந்தது நேற்றிரவு...!!
இன்று விடிந்து சூரியன்
சாய்ந்துவிட்ட போதிலும்
விலகாமல் நிற்கிறது
அவள்நினைவுகள்
நெஞ்சைவிட்டு நீளாமல் ...!!
நல்லது !
வழக்கம் போலவே மறந்து விட்டது ..,
கனவில் வந்தவளின் முகம்..!!
என்ன செய்வது ?
கனவில் கூட நமக்கு காதல் கொஞ்சம் தொலைவு தானே ..!!!?

No comments:

Post a Comment