Friday, August 21, 2009

கேட்காமல் கிடைத்த வரம்

பேசுவதற்கும் கேட்பதற்கும்
எத்தனையோ இருந்தும் கூட,
ஏனோ உன் இதழ் திறக்காத
மௌனங்களை
இரசிப்பதிலேயே என்
பாதிநேரம் ஓடிபோகிறது ..!!

கடமைக்குக் கொஞ்சநேரம்
வெட்கப்பட்டுவிட்டு,
கண்ணிமைக்கும் நேரத்தில்
வந்தமர்கிறாய் ...!!
உன்னுடல் என்னோடுரசி ..!!

கொஞ்சமாய் தீண்டத்தொடங்கி ,
நேரப்போக்கில் என் அத்தனை
விரல்களையும் பற்றிக்கொள்கிறது !
பூவிதழ் மிஞ்சும் உன் பிஞ்சு விரல்கள்..!!

அஞ்சுவிரல்கள் என்
உள்ளங்கை சிறையில்
அடைப்படிருக்கும் போழ்தும் .,
மீதமிருக்கும் அஞ்சு,
என் கண்ணகளை
வருடிக்கொண்டிருக்கிறது..!!

ஊடல்கொஞ்சம் கூடும்போது,
ஈரம்படாத இதழ்திறக்காத
முத்தம் கிடைக்கிறது..!!
என் கன்னங்களுக்கு வரமாய்..!!
நொடிகள் ஒவ்வொன்றிலும்
நீஎனை ரசிக்கும் போழ்துதான்
நெஞ்சினிக்கும் உண்மையொன்றை
உணர்கிறேனடி..!!

ஆம்... !

உன்னை போன்ற வரமொன்றை
இறைவனிடம் எத்தனை முறை
கேட்டாலும் கிடைக்காதடி ...!! அழகி !

No comments:

Post a Comment