Sunday, August 16, 2009

போர்வை இரகசியம்




'மணி ஆராச்சு ',
இன்னுமென்னடா தூக்கம் ?!

என்ற வேலைக்கு போகிற
அப்பாவின் அதட்டல்கள் ..!

'எதிர்த்த வீட்டு பையனெல்லாம்
குளித்து முடித்து கோயிலுக்குப் போகிறானாம்..!!
இது மட்டும் சோம்பேறிக்கனக்காய் சுருண்டு தூங்கிக்கொண்டிருக்கிறது'..!!

என்ற அம்மாவின் கரிசல்கள் ...!!!

இதெல்லாம் உருப்படுவதாய் தெரியவில்லை !!

என்ற அண்ணனின் சாபங்கள்..,

இத்தனையும் கேட்டுக்கொண்டுதான்
விழித்திருக்கிறேன் ..!!

எங்கே போர்வை விலக்கினால் உன் பிரிவின் நினைவில் நான்
அழுதுகொண்டிருப்பதை யாரும் பார்த்திட நேருமோ என்று !!!!

1 comment:

  1. hai prabha unga kavithaigal yellamey romba..........
    nalla irku
    wat to say there is no words to say...........
    yapdi ipdi yeluthuringa romba arumai

    ReplyDelete