Friday, May 20, 2011

நேற்றடித்த மழையில்...


நேற்றடித்த ஆசைமழையில் 
 இன்றெழுந்த எல்லாம் காதலாம் !
பார்க்க முடிகிற அன்பிலும் 
கேட்க நேர்கிற காதலிலும் 
உணர முடிகிற உண்மைகள் யாவிலும்
உடல்களின்  வாசமே
உண்மைப் பிரதானம் !
அது காதலாம்! 
ஓஹோ !

அப்படியானால் இதற்குப் பெயர் என்ன ? 
கனவில் விதி எழுதி ,
நினைவில் உணர்வெழுதி,
நீ எங்கோ நான் எங்கோ 
சென்றுவிட்ட போதும் ,
காற்றில் அன்பெழுதி 
சப்தமிட்டு வாசிக்கிறேன் !
அதைநீ  முத்தமிட்டு நேசிக்கிறாய் !

தோள் இல்லை - நான் 
சாய்ந்துகொண்டுதா  னிருக்கிறேன்-உன் 
மடியில்லை - நான் 
தூங்கிக் கொண்டுதா னிருக்கிறேன் ! 

விதியை மீறி விண்ணை எட்டிய 
நம் உணர்வுகள் இன்று !
நட்சத்திரங்களுக்கு நடுவினில்
உலவிக் கொண்டிருக்கும் காற்றோடு 
கைகோர்த்து காதலித்துக் கொண்டிருக்கிறது !

இதை விட ஒரு பெரிய காதலை
நான் பார்த்ததில்லை அழகி !

Thanx, that you are here to accredit my love ! 
Love you so much !

10 comments: