Tuesday, September 21, 2010

என் முதல் காதல் கடிதம் :


நிலவின் மடியில் நிரந்தர ஜீவனாம்சம் கேட்டு ஒரு பேராசைக்காரன் எழுதுவது. நலம், நல செய்ய 
ஆவல் ..!
  
நகரும் நொடிகளை விட்டு நகராமல் நிற்கும் என் நினைவுகள், கொஞ்ச நாட்களாய் உன்னோடு சுற்றி திரிகிற விசை நீ சுவாசிக்காத உண்மை..!  எங்கெங்கோ பார்த்திருக்கிறேன்! எங்கோ தூரத்தில் நின்றிருக்கும் உன் அசைவுகளை எல்லாம் நான் ரசிக்கத் தவறிஇருக்கிறேன்  (இருட்டுக் கனவில் மட்டும்) ! 

எல்லா அழகையும் எட்டிப் பறித்த பூவைப் போலிருக்கும் மின்மினிப் பனிமலரே.. என்னழகி..   

நான்கிரண்டு வாழ்கை பொருத்தமும், நானும் நீயும் ஒரே சாதியும் , கட்டும் முறையோ கிராமத்து சொந்தமோ எல்லாம் இல்லை எதுவுமில்லை ..!  அப்படிக் கணக்குப் போட்டுக் காதலிக்கும் அன்பும் எனக்கு  பழக்கமே இல்லை .!  

உன் தேவைகளை என் ஆசைகளாக்கிக் கொள்ளத் தெரியும்...!! அவ்வளவு தான்!  

வேறெந்தத் தகுதியும் என்னிடம் இருப்பதாய் பெருமை பேசப்போவதில்லை நான்! 

 நீ அழகி ! நான் ????.... நான் அதை ரசிப்பவன்!... அவ்வளவே! 

எவ்வளவோ மீறியும் ஒரே  ஒரே ஒரு பேராசையை மட்டும் இதயத்தில் ரொம்ப நாட்களாய் ஒதுக்கியே சேர்த்து வைத்திருக்கிறேன்! ஆம்..,  

உன் பெயருக்குப் பின் என் பெயர் போடும் ஆசைதான் அந்தப் ( பெயர்  + ஆசை ) பேராசை !   

பேராசை தீர்க்கும் நூறுபிறை மதியே , அழகி...!! என் வார்த்தைகள் பிடித்திருப்பின் உன்னோடு இதை பத்திரப் படுத்திக்கொள்! வாழவும் பிடித்திருப்பின் என்னையும் சேர்த்துப் உன்னில் பத்திரப் படுத்திக்கொள்!! முடிந்து போகும் புள்ளியாய் இல்லாமல் தொடர்ந்து நீளும் தொடர்ப்புள்ளிகளாக விழைகிறேன். உன்னுள் !  முடிவில்லாத அன்பினை  பதிலாகவும்  எதிர்பார்க்கிறேன்! கசக்கிப் போட என் அன்பு ஒன்றும் காகிதப் பூவில்லை என்று அசட்டுத்தனமாக நம்பும் அன்பான தலைக்கணம் கொண்டவன் நான் ..!! 

என் எதிர்பார்ப்புத் திசுக்கள் யாவும் எதிர்காலம் உன் தோளில் தான் என்று சிரித்துக்கொண்டே ஆரூடம் சொல்கிறது ! 

  (ஒரு வேல என்னய கிண்டல் கிண்டல் பண்ணுதோ ? சரி இருக்கட்டும் !) சேதிக்கு வருவோம்!  

ஊருலகில் நிறைய காதல் கடிதங்கள் அனாதைகள் ஆக்கப்படும் சேதியை நீ படித்திருப்பாய் ! நம் பிள்ளைகளாவது இந்தக் கடிதத்தை படித்துப் பெருமிதம் கொள்ளட்டுமே!  

உண்மையான அன்பு , நிராகரிக்கப் படுவது நிசமான பொய்தானென்று  !! 

Love you azhagi ....!!

4 comments:

  1. //உண்மையான அன்பு , நிராகரிக்கப் படுவது நிசமான பொய்தானென்று !!//


    உண்மை தான் சில நேரங்களில் .....பொய் தான் சில நேரங்களில்....

    கவிதையான ஒரு காதல் கடிதம் .....

    ReplyDelete
  2. @ தனிக்காட்டு ராஜா : புரிதலுக்கு நன்றி ..!! நான் ரசித்த அதே உண்மையைத்தான் நீங்களும் ரசித்திருக்கிறீர்கள்! க. க. க.போ !
    //கவிதையான ஒரு காதல் கடிதம் .....
    Nanri... Nanri... Nandri....

    ReplyDelete
  3. பேராசைக்காரனுக்கு ஜீவனாம்சம் கிடைத்ததா???
    //கசக்கிப் போட என் அன்பு ஒன்றும் காகிதப் பூவில்லை என்று அசட்டுத்தனமாக நம்பும் அன்பான தலைக்கணம் கொண்டவன் நான்//
    வீம்பான காதல்!!!உங்கள் பிள்ளைகள் நிச்சயம் பெருமை கொள்ளும்!!!!

    ReplyDelete
  4. செழியன் @ அண்ணா ...ஜீவனாம்சம் கிடைத்ததா கிடைக்கவில்லையா என்று தெரியாமல் தான் கவிதை எழுதி காலம் தள்ளிக் கொண்டிருக்கிறேன் !
    ஹஹா ...நல்ல வார்த்தைகளுக்கு நன்றி !! These words mean a lot to me ..!! THanx alott!!

    ReplyDelete