Wednesday, June 23, 2010

101 காரணங்கள் - நான் ஏன் உன்னை காதலிக்க வேண்டும்! 101 Reasons Why I Love You ( in tamil )

Admired and penned By Karur Prabha @ Anaadhaikathalan
  1. நான் தொடங்கிய வார்த்தைகளை என்னை விட அழகாகவே முடிக்கிறாய்!! முந்திக்கொள்பவன் நான்என்றால் முற்றுப்புள்ளி நீயாகஇருக்கிறாய்!                                                                                                                                  
  2. என் அன்பு பேசும் மொழிகளை என்னோடு பகிர்ந்து கொள்கிறாய்! பின் நீ, நான் என்னும் ஒருமை ,பன்மையாகிப் போகிறது !
  3. மற்றவர்களிடம்.., ஏன் உன்னிடமே நீ என்னை விட்டுக்கொடுப்பதில்லை! நானென்றால் உனக்கு அவ்வளவு பிரியம்! 
  4. உன்னையும் நான் எங்குமே விட்டுகொடுக்காமல் பேசும் என் உள்ளுணர்வு பிடித்திருக்கிறது !
  5. ஆயிரம் வாட்ஸ் ஓரவிழிப் பார்வையில் அசராமல் என்னை சாய்க்கும் உன் பார்வை!
  6. மைவிழிக் குடைக்குக்கீழ் மலர்ந்திருக்கிற நிலவு (கண்கள்)! கண்ணிமைக்காமல் கனம்ஒன்றும் அதை பார்க்கப் பிடிக்கும்!
  7. நீயும் உன் நினைவுகளும் இல்லாத நாட்களில் என் உயிர்போன இதயத்தின் "இல்லாத துடிப்புகள்" பிடித்திருக்கிறது !
  8. என் வழியில் நானுனை கூட்டிச்செல்லும் போது எங்கோ நீ தொலைந்து விடுகிறாய் !எனக்கும் பாதை மறந்து விடுகிறதே! உன்னைத் தேடும் தேடல் பிடிக்கும்!
  9. மாலைநேரக் கடற்கரை மணலில் நானும் என் நிலவும் சேர்ந்து ரசிக்கிற சூரிய அஸ்தமனம் ! கோடி கொடுத்தாலும் கொஞ்சம் கூட வேறெங்கும் கிடைக்காத சுகம் அது !
  10. நிலாக்குளிர் நீளும் வரை நீளும் நம் கைப்பேசி உரையாடல்கள், விடிந்த போதும் விடாமல் தொடரும் அழகு பிடிக்கும்!
  11. என் இன்பதுன்பங்கள் யாவும் உன் தோள்களில் மட்டுமே பாரமாக வேண்டும் என்ற உன் கோரிக்கை! பிடித்திருந்தது !
  12. என் வாழ்கை துணைக்கான தேடல் பட்டியலில் எல்லா இடங்களையும் நீயே ஆக்கிரமித்த உரிமை! பிடிக்கும்!
  13. உன்னோடு நானும் என்னோடு நீயும் இருக்கும் போது ! நம்மோடு நாம் என்று மாறிவிடுகிறோம் நாம்! அது பிடிக்கும்!
  14. நான் உன்னைப்போல அழகில்லையேடி! ஏன் என்னை போய் தேர்ந்தெடுத்தாய் என்று நான் கேட்ட போது ! நான் உன்னோடு இருந்தால் நீ என்னை விட அழகு என்றாய்! கிறுக்கி ! அந்த நிமிஷத்தை நான் எப்படி மறக்க முடியும் ?
  15. நிலவிற்கு சிரிக்கத் தெரிந்தால் அது கண்டிப்பாய் உன்னை போலத்தான் சிரித்திருக்கும்! உன் கள்ளசிரிப்பென்றால் எனக்கு  கொள்ளை ஆர்வமடி அழகி!
  16. எல்லோரையும் போலவே நமக்குள்ளும் சண்டை வரத்தான் செய்கிறது ! பிடிவாதம் யாருடையதாய் இருந்தாலும் விட்டுக் கொடுப்பவள் நீயாக மட்டுமே இருக்கிறாய்! எனக்காக மட்டும் !
  17. உனக்கும் எனக்கும் அடிக்கடி போட்டிகள் வருகிறது ! உன்னை விட்டுக் கொடுத்து என்னை ஜெயிக்க வைக்கிறாய் நீ ! மனைவியின் இலக்கணம் நீதாண்டி கிறுக்கி!
  18.  என் கண்களும் இதயமும் விழித்திருந்தால் அப்போது உன் நினைவுகள் மட்டுமே எங்கும் பிராதானமாய் இருக்கிறது ! இந்தப் புதிரான காரணம் பிடிக்கும்!
  19. உனக்கு எதெல்லாம் பிடிக்காது என்று எனக்கு தெரிவிக்கும் ஆசிரியன்! - "உன் கோபம்"! அது ரொம்பவே பிடிக்கும்!
  20. ஒரு வார்த்தை கூட பேசாமல் பேசும் உன் திறமை எனக்கு இல்லையே! அது பிடிக்கும்!
  21. நாமிருவரும் எதிரெதிரில் கடந்து போகும் போது ! நாம் இருவரும் பேசநினைக்கும் வார்த்தைகளை நமக்கு முன்னே நம் கண்கள் பேசி விடுகிறதே! அந்த நுட்பம் பிடித்திருக்கிறது!
  22. கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருந்தாலும் என் கைவிரல்களுக்குல்லேயே இருக்கிறது உன் வாசம்! அது நிறைய பிடிக்கும்!
  23. என்னை விட நீ வசதியேடி? எப்படி நமக்கு ஒத்துவரும் என்றேன்! ஆயிரம் கோடிக்கு நான் அதிபதி என்றாலும் உன் அன்பிற்கு முன் நான் இரப்பவள்(பிச்சைக்காரி) தான் என்றாய்!கொன்னுட்டடி அழகி !
  24. ஒரு ஓவருக்கு எத்தனை பந்துகள் என்றுகூட தெரியாத போதிலும் ! என்னோடு சேர்ந்து மட்டை விளையாட்டை ரசிக்கிறாய்! எனக்கு பிடித்தது உனக்குப் பிடிக்காமல் போய்விடக்கூடாதே ! என்னை புரிந்துகொண்டமைக்கு நன்றி டி .!
  25. என்னுடைய நண்பர்களை என்னைபோலவே நீயும் புரிந்து வைத்திருக்கிறாய்! அது பிடிக்கும்!
  26. எனக்கு பிடித்தவைகளை மட்டுமே உனக்கும் பிடித்தவைகளாய் மாற்றிக்கொண்டாய் ! நான் கொடுத்துவைத்தவன் டி அழகி.!   
  27. பொறாமைக்கோ, கர்வத்திற்கோ, நம்மிடம் வேலையே இல்லை ! இதைவிட வேறென்ன வேண்டும்!
  28. போடி வாடி என்று யாரழைத்தாலும் பிடிக்காதென்று சொன்னாய்! உன்னை பார்த்த நொடி முதலே அப்படித்தானே கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்! எனக்கு நீ கொடுத்த " விதிவிலக்கு  " நம் காதலை ஊருக்கு முரசடிக்கிரதடி.!
  29. யாருடைய அதட்டலுக்கும் அசராத நானோ உன் அன்பிற்கு முன் அடிமையானது எப்படியோ தெரியவில்லை! அது பிடிக்கும்!
  30.  யாருடைய அதட்டலுக்கும் அசராத நீயும் என் அன்பிற்கு முன் அடிமையானது எப்படியோ தெரியவில்லை! அதுவும் பிடிக்கும்!
  31. நேரில் கேட்பதற்கு நேர்மாறாய் தொலைபேசியில் கேட்குமுன் வசீகரக் குரல் பிடித்திருக்கிறது !
  32. "கிறுக்கா!" யார் கண்டுபிடித்தானோ தெரியவில்லை இந்த வார்த்தையை! நீ என்னை இப்படி அழைக்கையில் எழும் சந்தோஷத்தை நான் சொல்ல வார்த்தை எந்த மொழியிலும் இல்லை!
  33. நாமிருவரும் இணைந்திருக்கையில் நமக்குள் இருக்கும் 'ஒருமை" பிடிக்கும்!
  34. காற்றைப் போல மேன்மயானவலும்  நீ! புயலை போல வலியவலும் நீயே! அது பிடிக்கும்!
  35. காதல் திரைப்படங்களின் வசனங்கள் நம்மிடம் தோற்றுப் போகிறதை நாம் உணர்ந்திருக்கிறோம்! நம் ஒருநாள் சண்டையே ஒரு படமாக எடுக்கலாம் அழகி!
  36. என் உயிரோட்டம் எதனால் நடக்கிறதோ தெரியவில்லை., ஆனால் அத்தனைக்கும் நீயே காரணமாய் இருக்கிறாய் !
  37. நமக்குள் எத்தனை ஒற்றுமை இருப்பினும் ஒரே ஒரு விடயத்தில் என்னை வேற்றுமைப் படுத்தி விடுகிறாய் ! நான் ஆண் என்பதால் உன்னை விட நான் மேல் தான் என்று என்னும் உன் பெண்மை ! எவ்வளவோ பிடித்திருக்கிறது ! ஆனாலும் நீதான் என்னைவிட மேல்!
  38. சோகங்களில் நான் சுருண்டு விழும் போது ஆழம் விழுதாய் எனக்குள் பரவி என்னை தாங்குகிறாய்! துன்பம் என்னுடையதென்றால் அதற்குரிய வலிகளை உன்னுடயதாய் ஆக்கிகொள்கிறாய்! என்ன பெண்ணோ நீ! பிடிச்சுருக்கு !
  39. எப்படி என்னை பார்த்துக்கொள்வாய் என்று நான் கேட்டதற்கு , குழந்தை மாதிரி என்றாய்.!சந்தோஷம் !என் இரண்டாம் தாய் கிடைத்துவிட்டாள் !
  40. நம் அஞ்சு விரல்களும் ஒன்றோடொன்றாய் இருக்கையில் என் கோடி துன்பங்களும் கால்தூசி ஆகிப்போகிறது !
  41. காதலிக்கும் போது முத்தம் கொடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று உனக்கு நீயே நீதி சொல்லிக்கொண்டு என் உதடுகளில் உன் ஈரம் பதித்தாய் ! கள்ளி ! அப்போதே என்னைநீ முற்றிலும் வீழ்த்திவிட்டாயடி !
  42. என் தோள்களில் நீ சாய்ந்திருக்கும் போது சட்டென எழுந்து என்னை ஒரு பார்வை பார்க்கிறாய்! ஐயோ ! எனக்கு ! வார்த்தைகள் வரவில்லையடி! ஒரு முறை உன்னை கட்டி அனைத்துக் கொள்கிறேனே! ப்ளீஸ் !
  43. சொன்னதையே நான் மறுபடி மறுபடி சொன்னாலும் சலிக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கிறாய் ! சொல்பவன் நானாக இருப்பதானால் மட்டும்!
  44. ஊரார் பார்வைக்கு நான் கார்மேகம் ! உன் பார்வைக்கு மட்டும் ஏனோ நான் வெள்ளைநிலா !
  45. "போடா கருவாயா" என்று நீ ஒரு நாள் அழைக்காமல் இருந்தாலும் அன்றிரவு தூக்கம் கெட்டுப்போகிற காரணம் எனக்கு புரியவில்லை அதை தெரிந்துகொள்ளவே உன்னை காதலிக்க ஆசை !
  46. உன் காது மடல்களின் கீழ் படர்ந்திருக்கும் கார்கரும்கூந்தலின் ஒட்டுமொத்த ரசிகனும் நான் மட்டும் தான் !
  47. உன் ஒட்டுமொத்த பிடிவாதத்தையும் யாரோ ஒருவனுக்காய் விட்டுக்கொடுக்கிறாய்! அந்த யாரோ ஒருவன் நான் மட்டும் தான் என்பதை அறிந்தும் உன்னை எப்படி காதலிக்காமல் இருக்க முடியும் !
  48. ரெண்டு நாள் உன்னோடு பேசப்போவதில்லை என்று சொல்லி தொலைபேசி அழைப்பைத் துண்டிக்கிறாய் ! ரெண்டு நொடி கடந்ததும் மறுபடி அழைத்துச் சொன்னாய் ! என்னால உன்கூட பேசாம இருக்க முடியாது பிரபா!
  49. ஒவ்வொரு முறை உன்னைப் பார்க்கும் போதும் உன் அழகு எனக்கே தெரியாமல் என் பெருமூச்சை பரிசாகப் பெற்றுக்கொள்கிறது !
  50. "நீயும்" வேண்டும் என்று ஆரம்பித்தது நம் உறவு ! "நீ" வேண்டும் என்று அது தொடர்ந்தது! இன்று "நீ மட்டும் " வேண்டும் என்று முடிவிற்கே வந்துவிட்டது!
  51. வெகுநாட்கள் என்னைப் பார்க்காமல் இருந்து பின் எனைப்பார்க்கும் போது என் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொல்வாய் ! அது பிடித்துப்போனது எனக்கு!
  52. இதழ் முத்தம் பதிக்க எத்தனையோ இடமிருந்தும் உன் நெற்றியில் நான் கொடுக்கிற முத்தத்தை ரசிப்பதாகச் சொன்னாய்!உன்னை அப்போது இன்னும் அதிகமாய் காதலித்தேன் !
  53. இந்த நிமிடம் இறந்து நான் போனாலும் எந்தக்கவலையும் எனக்கில்லை ! என் மேல் அன்பு செய்வதற்காகவே கடவுளால் உலகிற்கு அனுப்பப்பட்ட தேவதையை நான் அடையாளம் கண்டுவிட்டேன் !
  54. உன் அதிகாலை உளறல்களில் புதைந்து கிடக்கும் மழழை மொழி கேட்கவே ஏழு சென்மமும் உனைக் காதலிக்கலாம்!
  55. என் வீட்டில் வீற்றிருக்கும் நிசமான நிலவே ! நீ தூங்கும் அழகினை கால்நூறு  கம்பர் வந்தாலும் வர்ணிக்க முடியாதடி! பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கிறேன் ! பறந்து போய்க்கொண்டே இருக்கிறது நிமிஷங்கள் !
  56. தமிழ் மொழி நிசமாகவே அமிழ்தினும் இனியது தான் ! ஆனால் அதனினும் இனியது ஒன்றிருக்கிறது ! அது "உன் தமிழ்" !
  57. மனதிலும் மலர்கொடி உடம்பிலும், என்ன வலியோ, எதுவாய் இருந்தாலும், என் மடியில் படுத்துக்கொண்டே என் கைகளை இறுகப் பிடித்துக்கொள்கிறாய் ! உன் வலிகளை என் வருடல்கள் தீர்த்துவைக்கும் என்ற உன் எண்ணம் பிடிக்கும்!
  58. என்னை பிடிச்சுருக்கா ? என்று கேட்டேன் ! "ம்ம்" என்றாய்! என்னைப் பார்த்துக்கொள்கிறாயா என்று கேட்டேன் ! அதற்கும் "ம்ம்" என்றாய் ! கேட்ட முதல் நொடியே என்னைப் புரிந்து கொண்டவள் நீ மட்டும் தான் அழகி!
  59. சமைக்கத் தெரியுமா? என்று ஒருமுறை கேட்டேன் ! நீயோ அதற்குத் தானே உன்னைக் காதலிக்கிறேன் என்றாய் குறும்பாக! சமையல் தெரியாத காதலியோடு தினமும் சண்டை போட வேண்டும் என்றஎன் நெடுநாள் ஆசை இப்போது உன்னால் நிறைவேறப் போகிறதடி கிறுக்கி!
  60. ஆயிரம் பேர் நம்மை சுற்றி இருந்தாலும் உன் ஒவ்வொரு பார்வையிலும் என்னை மட்டுமே நிறைக்கிறாய் நீ ! இது எந்த காதலனுக்கும் கிடைக்காத வரம் !
  61. வெளியே எங்காவது செல்லும் போது வெட்கத்தை எல்லாம் எங்கோ தூக்கி எறிந்துவிட்டு என் கைகோர்த்து நடக்கிறாய்! அது பிடிக்கும்!
  62. தவறோ ,சரியோ என் பாதைகள் தெரியவில்லை! அத்தனையிலும் என்னோடே நடந்து வருகிறாய்! அப்படி என்மேல் நீ வைத்திருக்கும் நம்பிக்கை பிடிக்கும்!
  63. பிடிக்குமா என்னை ? என்று முதன் முதலாய்க் கேட்டேன்! பிடிக்காது என்றாய்! பதில் சொன்னவளோ என் நெஞ்சினை அப்போதே ஆக்கிரமித்துவிட்டாள் !
  64. பிறைபோன்ற கொடிஇடையை ரசிக்க எத்தனை சென்மமிருந்தாலும் அத்தனையிலும் உன் காதலானாகவே பிறக்க வேண்டும் !
  65. யாருக்கும் எந்தத் தீங்கும் நினைப்பதில்லை ! உன்னைத் துன்பப் படுத்துபவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாய்! நீ என்பது நானேதான் அழகி!
  66. என்னோடு இருக்க விரும்புகிறாய் ! இன்னும் குறிப்பாய் சொல்லப்போனால் என்னோடு மட்டும்!
  67. நான் உன்னை காதலிக்கிறேன் ! கொஞ்சம் எனக்காக ! நிறைய உனக்காக !
  68. இருபத்தி நான்கு மணி நேரம் பேசினாலும் அலுத்துபோகாமல் இருக்கிறது நம் தொலைபேசி உரையாடல்கள்! ஆசை பேசும் மொழி கூட சிலநேரம் சலித்துப் போகக்கூடும் ! அன்பு பேசும் மொழி எப்படி அலுத்துப்போகும் ?
  69. எனக்குப்பிடித்த பைத்தியக்காரத் தனங்கள் அத்தனையும் உனக்கும் பிடித்திருக்கிறது!பின் எப்படி உன்னை எனக்குப்பிடிக்காமல் போகும் ?
  70. என் எந்தஒரு செய்கையையும் நீ கேலி பேசுவதில்லை ! அது பிடித்திருக்கிறது!
  71. என் இதயக்கப்பலை மகிழ்ச்சிக்கரைக்கு செல்ல வழிகாட்டும் ஒரே பெரிய கலங்கரை விளக்கம் நீ ! என் ஆண்மைக்கேற்ற பெண்மை!
  72. இறுக்கமாக என் விரல்களை நீ பிடித்துக் கொள்கையில் இருவரின் வலிகளும் தெரிவதில்லை! வலிகள் பாதை தெரியாமல் எங்கோ ஓடி தொலைந்துவிட்டது ! வருடல்களில் வலியை குறைக்கும் இந்த வித்தையை யாரிடம் கற்றுக்கொண்டாய் நீ ?
  73. அன்பு மட்டும் போதாது காதலுக்கு! நம்பிக்கை அதைவிடத்தேவை என்று சொன்னாய்! அவ்வாறே வாழ்ந்தும் காட்டினாய்! அது பிடித்திருந்தது!
  74.  என்னை சிரிக்க வைக்கும் வழியும் நீ அறிவாய்! அழவைக்கும் வழியையும் நீ மட்டுமே அறிவாய்!
  75.  திசைகள் நான்கு என்றேன்! இல்லை ஒன்றே ஒன்றுதான் என்றாய்! என்னவென்று கேட்டதுமே சட்டென சொல்கிறாய்! "உன் வழி" தான்டா கிறுக்கா" உன்னுடையது மட்டும்!
  76. உன் தோள்களில் நான் முதலில் சாயும் போது கண்கள் நனைந்துபோனது ! கடைசி வரைக்கும் நீ நிலைக்கப் போவதில்லையே என்றெனை பயமுறுத்தியது நெஞ்சு!
  77. எவ்வளவு பாரங்கள் இருந்தாலும் எல்லாம் தீர்ந்து இலகுவாகிறது மனம் ! உன் சிரிப்பிர்ற்கு முன்னால் மட்டும் !
  78. உனக்கு ஏற்றவன் நான் மட்டுமே ! எனக்கு ஏற்றவள் நீ மட்டுமே!
  79. நீயில்லாமல் நானும், நானில்லாமல் நீயும் "கம்பி அறுந்த வீணை!
  80.  எப்படி அன்பு செய்வது என்று எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறாய்! கிறுக்கி! வாழ்கை முழுதும் உன்னிடமே படிக்க விரும்புகிறேனடி!
  81. வேறெதற்கும் பிறக்காமல் உன்னை காதலிக்க மட்டுமே பிறந்தது போலத்தான் என் உள்ளுணர்வு பேசிக்கொள்கிறது !
  82. தூக்கமில்லாமல் என் வளர்ச்சிக்காகவே ஒவ்வொரு விஷயத்தையும் நீ செய்கிறாய்! அது பிடித்திருக்கிறது !
  83. எனக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் தூண்டுகோல் நீ! நீ மட்டுமாய் இருக்கிறாய் !
  84. நிமிடத்திற்கு எத்தனை தடவை துடிக்கிறதோ தெரியவில்லை என் நெஞ்சம் ! ஆனால் என் அத்துனை துடிப்பிலும் உன் நினைவுகள் கலந்திருக்கிருக்கிறது அழகி!
  85. உன்னைப்பார்க்கும் ஒவ்வொரு நொடியிலும் என் இதயத்துடிப்பில் ஒன்று எங்கோ காணாமல் போய்விடுகிறது !
  86. பொக்கிஷமாக்கப் படவேண்டிய நினைவுகள் என்று நான் சொல்லிக்கொள்வது உன் நினைவினை மட்டும் தான்!
  87. என் இதய ஆழத்தில் ஒளிந்திருக்கும் உணர்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடியவள் ! நீ மட்டும் தான்!
  88. அளக்கமுடியாத சந்தோஷங்கள் நிறைந்த வாழ்கை ! நீ வந்ததற்குப் பின் சாமி கொடுத்த வரம் ! கடவுளே வரமாய் எனக்குக் கிடைத்துவிட்டது போல இருக்கிறது !
  89. நாளை என்ன நடக்குமோ யாமறியேன் ! ஆனால் நடந்து கொண்டிருக்கிற நிமிடங்கள் யாவும் மறக்க முடியாதவை! நீ என்னோடு இருப்பதால் மட்டும்!
  90. சோக எழுத்துக்களை மட்டும் சுமந்துகொண்டிருந்த என் வாழ்கை பக்கங்கள் நீ வந்தது முதல் சுகங்களை மட்டும் சுமப்பது புதுமை !
  91. வார்த்தைகளில் இல்லாமல் செயல்களிலும் சந்தோஷத்தை நிகழ்த்திக்காட்டக்கூடிய வலிமை உன்னிடம் மட்டுமே நான் அதிகம் பார்த்திருக்கிறேன்!
  92.  காதல் என்பது எவ்வளவு தூய்மையானதோ அவ்வளவு தூய்மையையும் உணர்ந்தது நீ என்னை காதலித்த போது தான்!
  93. காதல் என்பதற்கு என்ன அர்த்தமோ அதை விட ஆழமான அர்த்தத்தினை எனக்கு நீ தெரியப்படுத்தி இருக்கிறாய் !
  94. என் வாழ்க்கைக் கப்பலின் சிறந்த மாலுமி நீ மட்டுமே ! சோகப் புயல்களுக்கு நடுவில் நீ என்னைக் கூட்டிப்போகும் அழகினை அமைதியாய் உட்கார்ந்து கொண்டு ரசிப்பது மட்டுமே என் வேலை!
  95. உனக்கு மிகவும் இஷ்டமான பொழுது போக்கினை என்பொருட்டு நீ மறந்து போகிறாய் ! என்னோடு இருக்க வேண்டுமென்ற ஒரே ஆசையில் !
  96. என் இதழ் வாசலில் முதன் முதலில் சிவப்புச்சாயம் பூசியவள் நீ! நீ மட்டுமே!
  97. எனக்கென ஒதுக்கப்பட்ட நேரம் இருக்கிறது ! அவை அத்தனையும் உனக்காகவே செலவழித்து கொண்டிருக்கிறேன் நான்! நீ என் வாழ்வில் வந்தது முதல் !
  98. என் ஆதிமுதல் அந்தம் வரை உனக்கு அத்துப்பிடி ! ஆம்., ஏனோ உனக்கு மட்டும்! 
  99. என் ரகசிய தேசத்தின் காவலாளி நீ! உன்னைமீறி என் ரகசியங்கள் எங்கும் போவதில்லை!
  100. நீ ! என் அழகியடி! அதனால் தான் உன்னை காதலிக்கிறேன்! 
  101. இப்படி! ஒரு நிமிட யோசனையில் நூறு காரணங்கள் எழுதும் அளவிற்கு என்னையும் ஒரு கவிஞனாக்கியது நீ மட்டும் தான் அழகி ! உன்னால் மட்டுமே இத்தனையும் நிகழ்ந்தது 
இந்தக் காரணங்களை எழுதத் துணையாய் இருந்த என் அழகிக்கு இது சமர்ப்பணம் !          
L   o   v   e   Y   o   u     o   M   u   c   h   d   i   a   z   h   . . .

      27 comments:

      1. அருமை, பிரமாதம்... சூப்பர் .... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் .... பகிர்வுக்கு மிக்க நன்றி... :)

        ReplyDelete
      2. அசார் டி அவர்களின் கருத்திற்கு மிக்க நன்றி!

        ReplyDelete
      3. Astrologer S ArulmoorthiJuly 10, 2010 at 7:38 AM

        காதல் என்பதற்கு என்ன அர்த்தமோ அதை விட ஆழமான அர்த்தத்தினை எனக்கு நீ தெரியப்படுத்தி இருக்கிறாய் !

        இப்படி! ஒரு நிமிட யோசனையில் நூறு காரணங்கள்
        வாழ்த்துக்கள்

        ReplyDelete
      4. Astrologer S Arulmoorthi அவர்களுக்கு நன்றி!

        ReplyDelete
      5. பிரபா ... எப்படி உன்னால மட்டும் இப்படி யோசிக்க முடியுது ... இவ்ளோ dedicated words ... Really great...

        ReplyDelete
      6. Thanks alot indu...!!உண்மையான அன்புன்னா என்ன'ன்னு ஒவ்வொரு நிமிஷமும் உணர வைக்கற அளவுக்கு உங்க மேல யாராச்சும் பாசமா இருந்தாங்கன்னா... அப்போ உங்களுக்கும் வார்த்தை வரும்... நீங்களும் எழுதுவிங்க...! அன்பில் நிலைத்திருங்கள் ! கேள்வியும் அதுவே ! பதிலும் அதுவே!

        ReplyDelete
      7. really superb lines....i became a big fan of ur poems...keep posting ur poems praba...

        ReplyDelete
      8. Ananchu @ Thank you so much ....Im happy that i got such a fanz... Love you frend... Thanks for ur comment...

        ReplyDelete
      9. இதப் படிச்சிட்டு என் தூக்கம் போயிருச்சு பிரபா.. எவ்வளோ அனுபவிச்சு எழுதியிருக்க???

        எந்த பாயிண்ட்ட குறிப்பிட்டு சொல்லனு தெரியல.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு கதை சொல்லுது.

        தொடர்ந்து எழுது.. படிக்க ஆசை.

        ReplyDelete
      10. @ராதே..... என்ன சொல்றிங்க ? நெஜமாவா?? ஆத்தா ... நா பாஸ் ஆய்ட்டேன் .... நானும் கவிஞன் தான்... நானும் கவிஞன் தான் !!
        // தூக்கம் போச்சா?? என்னைவிட ரொம்ப ரசிச்சுட்டிங்களோ ?? anyway... ரொம்ப நன்றி ராதே ...கண்டிப்பா தொடர்ந்து எழுதறேன்....!

        ReplyDelete
      11. very very very very nyc dear......
        continue writing wat a words i got tears in my eyes by studying ur words da ...
        by
        your dear frnd -ad

        ReplyDelete
      12. உங்களை எப்படி கூப்பிடன்னு தெரியல அண்ணா,தம்பி,நண்பா,மச்சி,பாஸ்,சார்,ஐயா.... உங்கள் தளத்திருக்கு முதல் முறை வந்தேன். முதலில் படித்தது இந்த 101 காரணங்களைத் தான். என் மனசில எங்கயோ நின்னுட்டீங்க. ஏதோ ஒரு இனம் தெரியாத பாசம், மரியாதை உங்க மேல ஏற்பட்டிடுச்சு.

        கொடுத்து வைத்தது நீங்கள் இருவர் அல்ல உங்கள் காதல் தான். அழகின்னு நீங்க கூப்பிடுறதே ஒரு தனி அழகு. எப்படி இப்படி எல்லாம் காதலிக்க முடியுது? ஒருத்தர் மேல இன்னொருத்தருக்கு இவ்வளவு அன்பா! சுத்தி போடுங்க என் கண்ணு பட்டிடுச்சு.. நிறைய கண்ணும் பட்டிருக்கும் உங்கள் காதல் மேல.

        படிக்கும் போது நிறைய இடத்துல என்னையும் அறியாமல் அழுதேன். இந்த ஒரு பதிவு போதும் அனைவரையும் உங்கள் தளத்தின் விசிறிகள் ஆக்கிவிடும். இதோ நானும் ஆகி விட்டேன்.

        சத்தியமா உங்களைப் பாராட்ட என்கிட்ட வார்த்தைகள் இல்லை. நிறைய சொல்லனும்னு மட்டும் இருக்கு ஆனால் வார்த்தைகள் வர மாட்டேங்குது. விருப்பம் இருந்தால் உங்கள் மொபைல் என்னை கொடுங்க. இப்படி ஒரு பதிவுக்கு வெறும் வார்த்தைகளோட நிற்காமல் ஒரு நாலு வார்த்தையாவது பேசணும்னு தோனுது.

        எல்லாமே ஓகே. உங்கள் வலைத் தளத்தின் முகவரி தான் ஏதோ என் மனதை நெருடுது. "அனாதைக்காதலன்" ???? எதுக்கு இந்த பெயர் வச்சீங்க. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இது வெறும் பெயர் மட்டும் தானே?

        ReplyDelete
      13. unga kavithaigal super ah iruku padika padika solla mudiyatha unarvugal romba anubavichi eluthi irukinga... ungal kathaluku en vazhthukal... Bharathi

        ReplyDelete
      14. Bharathi : thanx sir !! REaly thanxlot for your comment ! and welcome to my blog !

        ReplyDelete
      15. @ எவனோ ஒருவன் : இப்படிப்பட்ட ரசிகரையும் , இப்படிப்பட்ட ஒத்த கருத்துடைய ஒவ்வொரு மனிதர்களும் , ஏன் ? மாற்றுக் கருத்து இருக்கிற மனிதர்களும் கூட ரசிக்கிற விதமாய்... என் எழுத்து அமைந்ததை என்னாலேயே கூட நம்ப முடியவில்லை ! எப்படியோ நடந்து விட்டது ! எழுதிவிட்டேன் ! உங்கள் பின்னூட்டத்திற்கு ! ஆயிரம் பத்தாயிரம் நன்றி ! உங்கள் வருகைக்கும் நன்றி !

        ReplyDelete
      16. lovely da brother no words to tell:)really she s unlucky dear...............

        ReplyDelete
      17. @ amar : Thanx for your comment ! :) wat for she is unlucky ? Both of us are always luckiest fellows forever :)

        ReplyDelete
      18. hai this is the first time naan unga blog ku varathu.............
        first naan padithathu unga 101 reasons thaan its really super pa............
        nammalaiyum ipdi indha alavu yarum love pannamatangalanu irku..............
        it touch my heart thanks alot

        ReplyDelete
      19. @ Zunai : thanx thanxlot... You will get a one like that for sure !:) Love everyone as you .. for sure you will get sucha one in ur life :) WIshes...

        ReplyDelete
      20. unnoda inda yen pudikudunguraduke oru 101 reasons sollalam avlo alagu ovoru lineum...hats off<3<3...

        ReplyDelete
      21. vanakam...
        naan thangalin padivil mudalil padithadu inda padivaye,idai padithadarku pinbudan naan tamilil enadu karuthukalai sollavendum endra aarvam vandadu,en tamilil yedenum thavarugal irundal ennai manniyungal,inda padivu miga arumaiyaga ulladu,yedu pidikiradu yendru solla theriyavillai irupinum yedavadu sollavendum yendra aarvam.varigal ovondrum thangalin kaadalai miga alahahavum,thulliyamahavum therivikiradu...arumai kaadal thangalil kaadaluku yenadu valthukal.....
        ippadiku,
        peyarida virumpada vasagi
        nandri.

        ReplyDelete
      22. அற்புதமான காரனங்களுடனும்,
        அருமையான வரிகளுடனும்,
        கவிதையையே கவிதையாக
        விதைத்து விட்டீர்
        நண்பரே...

        ReplyDelete
      23. Super i love you

        ReplyDelete
      24. Super i love you

        ReplyDelete
      25. Super i love you

        ReplyDelete
      26. அருமையாக உள்ளது அண்ணா...

        நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை,

        ஆனால்
        உங்கள் பதிவில் ஓரளவு கண்டுக்கொண்டேன்
        காதல் என்றால் என்னவென்று..!

        ReplyDelete