Friday, April 30, 2010

தாயைவிட மேலானவன்- இவன் தன்னிகரில்லா என்னுயிர்- நண்பன்


இருவரின் உணர்ச்சிகள்
ஒருமிக்கும் இடத்தில்
வாழ்கிறது காதல் !

இருவரின் உணர்வுகள்
ஒருமிக்கும் இடத்தினில்
நட்பு வாழ்கிறது !!

தாயின் கருவறை
தவிர வேறு எங்காவது
பிறந்துகொள்ள வழி இருந்தால்
உன் இதயத்தில் பிறப்பேன்
நண்பா..!!

கல்லறை தவிர வேறு
எங்காவது புதைக்க
மனிதன் அனுமதித்தால் ,
உன்காலடி சுவடுகளின்
கீழே புதைவேனடா..!!

மண்ணுக்குள் விதைபோல
மனதிற்குள் நட்பு !! 

பெண்ணுக்குள் தேடினேன் -
அதை சதை உணர்ச்சி
என்றார்கள்..!!

உனக்குள் தேடுகிறேன்!!
இன்று எவர் தூற்றக்கூடும்
நம் உறவை .?

வயது புரிந்ததும்
வாழ்க்கையும் பெண்களும்
பிடித்திருந்தது !!
வாழ்க்கை புரிந்ததும்
உன்னையும் நட்பையும் தானே
ரசிக்க தோன்றியது !! 

சட்டைப்பை கனத்தை கண்டால்
கட்டியணைக்கும் சொந்தங்கள்
மத்தியில்,

சட்டையே அணியக்கூட
வசதி இல்லாத போதும்
என்னோடு நீயிருந்தாய் !!
அன்று உன் நட்பு யாவும் என்
கற்பைக் கவர்ந்தது !! 

"காதலியின் மடியினில் சாவேன் !"
என்றெல்லாம் நான் , கவிதை எழுதிய
காலம் மலையேறிவிட்டது.. !!
உன் தோள்களை நீ
தரமாட்டேன் என்றா
சொல்லிவிடப் போகிறாய் ..??

-என் நெஞ்சுத்துடிப்பாய் நிலைத்திருக்கும்
அத்துனை நண்பனுக்கும் சமர்ப்பணம் !
"Dedicated to all my friends" "LOVE YOU ALL DA"

2 comments: