Thursday, December 29, 2011

ஜிம்மியும் காதலும் . . . .


மழையையும் மரங்களையும்
நாய்க்குட்டிகளையும்,
ஆட்டுக்குட்டிகளையும்,
குருவிகளையும் , குயில்களையும்,
பார்பி பொம்மைகளையும் ,
பஞ்சுமுட்டாய்களையும் மட்டுமே
ஒரு தரப்புப் பெண்கள்
ரசித்துக் கொண்டிருக்க,

இன்னொரு பக்கம் நீ மனிதர்களை
நேசிப்பதற்கே நேரமில்லை என்கிறாய் !,
பிடித்து வைத்தும்
அடங்க மறுத்துப்போகிற நெஞ்சோ
இதைப் பிடித்துப்போய்
உனை வந்து சேர்ந்தது !

இன்று , நீயும் உன் அன்பிற்கும் முன்
மழையோ , மின்னலோ ,
ஆட்டுக்குட்டியோ, நாய்க்குட்டியோ
எனக்கு ஒருபோதும்
அழகாகத் தெரிவதே இல்லை அழகி!
உன்னை நேசிப்பதற்கே நேரம்
சரியாய் போகிறதடி !

3 comments:

  1. உனக்காவது நேரம் இருக்காயா? இல்ல அந்த புள்ளைய மட்டும்தான் விரும்புறியா?

    ReplyDelete
  2. @ prabhu : ஹஹா .. நா சொன்னத தவிர வேற எதுக்கும் நேரம் இல்லை பிரபு .... !! ( அப்பாடா சமாளிச்சுட்டோம் !!! )

    ReplyDelete
  3. nalaruku prabha.....
    theriyum neramillai nu

    ReplyDelete