Sunday, October 31, 2010

வழக்கம் போல இதற்கும் தலைப்பு -அன்பு




யுகங்கள் தோன்றி மறையும் !


நாகரிகம் வளர்ந்து சுறுங்கும் !


மனிதர்கள் பிறந்து மடிவர் ! 

'முரண்பாடு' என்னும்
முதலிலேயே எழுதி 
வைக்கப்பட்ட விதியில் 

நீயும் நானும் 
ஒருபொருள் சுமந்த இரு வரி அழகி !
அவ்வளவுதான்!

நாம் ....

பிறந்தோம் வாழ்ந்தோம்,  
வாழ்ந்துவிட்டு மறைவோம்! 

இடையில்...?

இருவரும் சேர்ந்து விதியில்
ஒரு வரி மட்டும்  எழுதினோம்! -
அதுதான் காதல்  

நம் இருவரின் காதலும் 
சேர்ந்து ஒரு கவிதை எழுதியது - 
அது அன்பு !

இப்படி ,
நிலையில்லா மனிதவாழ்வில் 
என் நித்தியமெல்லாம்
உன் அன்பிற்காக மட்டும் வாழ்வது 
எத்தனை பெரிய வரம் அழகி !


7 comments:

  1. Anbarasan @ Valakkam poalave nandri !! sir

    ReplyDelete
  2. capcap @ உங்கள் 3 வார்த்தை அருமைக்கு.... என் மூன்று வார்த்தை நன்றி ! 6 வார்த்தை மிக்க நன்றி !

    ReplyDelete
  3. //இருவரும் சேர்ந்து விதியில்
    ஒரு வரி மட்டும் எழுதினோம்! -
    அதுதான் காதல் //

    :)

    ReplyDelete
  4. தனி காட்டு ராஜா / ... ஒரு வரி எழுதியது தான் , இன்று நான் ஓராயிரம் வரி எழுத தூண்டுதலாய் அமைந்திட்டது !ரசித்த உள்ளத்திற்கு நன்றி !

    ReplyDelete