Thursday, June 10, 2010

என் காதலியின் பெயர்

பள்ளிக்கூடம் போகிற வழியில்
பாழடைந்த மண்டபத்தின்
தூசு படிந்த சுவற்றில் ,

ஊருக்கு மேற்கே இருக்கும்
குளத்தை ஒட்டிய
குறுகிய பாலத்தின் ஓரங்களில்,

என் சுற்றப்புறம் தென்படும்
பாறைகளிலும் , பள்ளிக்கூட சுவர்களிலும்,

இளைப்பாற மரநிழல் தேடிப்போகையில்
மணல்பரப்பின் மடியினில்
வேப்பங்குச்சியின் கிறுக்கல்களில்,!

சாமி படம் போட்டஎன் நோட்டு புத்தகங்களில்,
பிள்ளையார் சுழிக்கு பதிலாய்,

இதயம் போட்டு அம்பு விட்டு
பட்டினத்து  கடற்கரை மணலில்,  

என்று 
எங்கெங்கோ உன் பெயரை
கிறுக்கி வைக்கும் போதே தெரியுமடி..! 

உன் நியாபகார்த்தமாய் கடைசி வரை
என்னோடு நிலைக்கப் போவது
உன் பெயர் மட்டும் தான் என்று .!

3 comments:

  1. தேவதைகள் பூலகத்தில் நிலைப்பதில்லை பிரபா :)

    ReplyDelete
  2. nallaruku prabha en kooda vum nee irukka poradilla un pear mattum than irukka pogudhu nu nenakrean ....prabha prabha prabha .....
    veryyyyyy nyc da ..........

    ReplyDelete
  3. உன் நியாபகார்த்தமாய் கடைசி வரை
    என்னோடு நிலைக்கப் போவது
    உன் பெயர் மட்டும் தான் என்று .!
    //nalaruku prabha nijam than nam ninaipadhu pol anaivarum kooda irundha nalaarukumilla?!

    ReplyDelete