Saturday, July 21, 2012

உனக்குப் பிடித்த தலைப்பு - 30 Mod கவிதைகள் (தொகுப்பு 2)




"பூ வாங்கித்தாயேன்"
என்று
கேட்டு வாங்கி
சூடிக் கொண்ட
ஒரே சாமி
நீதான்டி


உலகின்
எல்லா
பூக்களையும்
அன்பெனும்
ஒரேநூலில்
கோர்த்து
செய்த
ஆரணங்கு நீ...
நீ மட்டுமே !

எல்லாம்
மாயையென்றறிந்த
பின்பும்
எனக்குள்
நிறைகிற
ஒருதனி
உண்மை நீ !
உயர்தனிப்
பேதை நீ !
அன்பின்
பேரொளி !
அழகின்
மகரந்தம் !
உண்மையின்
பெருந்திரட்டு !
ஒப்பில்லா
சண்பனி !
 நிலவை
வெய்யில்
ரகசியமாய் முத்தமிடுகையில்
நீ கன்னம்
சிவந்து
போவதேன் !?
உண்மையைச்
சொல்
நிலத்தின்
நிலவுப்
பிரதி(நிதி)தானே
நீ!?
 

 
கரையோரம் நின்றிருந்தேன்,
ஒரு காதற் பேரலை
என்னை
ஆழ்கடலுக்குள்  
அடித்துச்சென்றது.
அன்பு செய்தது. 
அரவணைத்தது. 
அத்தனை ஈரம் 
ஆழ்கடல் மேனி, 
நனைந்தேன் , 
ரசித்தேன்,
நாளெல்லாம் 
வாழ்ந்தேன்.
அதைவிட வேகம் 
காலம்.
பிரித்தது,
 இழுத்தெனைக்  
கொணர்ந்தது
. விட்டென்னை
வீசியது.
நுரைகடற்மணலில் 
நான்மட்டும் 
ஒத்தையாய் 
கிடக்கிறேன்.
ஏ நல்ல விதியே, 
என்னை அள்ளும் 
ஒற்றைஅலையை 
எங்கே கொண்டு 
ஒளித்து வைத்தாய் !?
அலையின் சுவடின்றியென் 
அழுகுரலும் காய்ந்திட்டதே!
அன்பின் நல்லலையை 
இனியேனும்
என்மிசை
சேர்ப்பாயோ!
 
 

இரவோடு
இரவாய்
அன்போடு
அன்பாய்
அமைதியோடு
அமைதியாய்
என்
இதயத்தின்
குருதி
மழையில்
நனைந்து
நொடிநேரத்தில்
ஜனித்த
நூறுவண்ண
ரோஜாப்பூ
நீ !
  
 
என்
இதயமெங்கும்
பற்றி எரிந்து
பின்
சில்லெனக்
குளிரும்
காதல்
ஜுவாலைகள்
உன் பிரிவும்
நினைவும் !
 
மருவிதழ்களின்
மறுபிறப்பு
நீ !

மருவிதழ் : Flower Petals : பூவிதழ்

 ♥
எல்லையில்லா
பேரானந்தம்
எங்கிருந்தாலும்
தூக்கி
எறிந்துவிட்டு
ஓடிவந்து
உன்கைகளைப்
பிடித்துக் கொண்டு
உட்கார்ந்து
கொள்ளத்
தான் நினைப்பேன் ..
ஏனெனில்
நீயல்லாத
எதையுமே
நான் நிலையாக
விரும்புவதில்லை
அழகி !

 
கடவுளின்
துகள்களை
நான்
கண்டுபிடித்திருந்தால்
அதற்கு
உன்
பெயரிட்டிருப்பேன்
அழகி !

Higgs Bosson Effect


கடவுளின் காதல் துகள்கள் :
************************

அணுவுக்குள்
ப்ரோட்டான்
நியூட்ரான் ;
அதற்குள்
குவார்க் ;
குவார்க்குடன்
எலெக்ட்ரான் ;
எலக்ட்ரானுக்குள்
லெப்டான் ;
இவைகளை
எல்லாம்
ஒட்டவைக்கிறதாம்
"போசான்"!

அது சரி !
உலகம் செய்யும்
கடவுளின்
துகள்களுக்கு
யாரோ
என்ன பெயரோ
வைத்துக்கொள்ளட்டும் !

நான் அணுவால்
ஆனவன்
என்னுள் இருக்கும்
ஒவ்வொரு
குறுந்துகள்களும்
உன்னாலானவை !
ஆகவே
என்னை நிரப்பும்
கடவுளின்
துகள்களுக்கு நான்
உன் பெயர்
வைத்துக்கொள்கிறேன்
அழகி !

பிரபா
 

ஒரு கதவு
மூடினால்
இன்னொன்று
திறக்குமாம் !
எனக்கு
எந்தக் கதவுகள்
மூடினாலும்
பரவாயில்லை
திரும்பிப் பார்த்தால்
நீ நிற்பாய்
அது போதும் !


வலிமிகு
உன்
கண்ணீரெல்லாம்
அள்ளிக்
கொண்டுபோய்
கவிதையாக்கிக்
கொணர்ந்து
உன்னை
சிரிக்க வைத்தேன் !
ஒரு கவிதையை
சிரிக்க வைத்தேன் ,
ஆகவே நானும்
கவிஞன் தான் !

ஒவ்வொரு
இரவும்
போர்த்திக்கொள்ளும்
மாயோளின்
வர்ணம் நீ ,
மாயோளே நீ !

வெளியிலும்
வரத் தெரியாமல்
உள்ளேயும்
உறையத் தெரியாமல்
யாரிடம் பேசினாலும்
தொண்டைக்குழியில்
கிடந்தழுகிற
கண்ணீரில் எல்லாம்
ஒட்டிக் கிடப்பது
உன் நினைவுகளன்றி
வேறேது அழகி ?
 

நீ நான்
அவன் அவள்
என எங்கோ
யார்யாரோ
நோகடித்துக்
கொண்டுதான்
இருக்கிறோம்
காதலை ;
புரிதலால் ,
புத்தித் திமிரால்,
ஆணவத்தால்,
அன்பின்மையால்
அழகெனும்
மிதப்பால்
அது இதுவென
ஆயிரம் காரணத்தால் ...
ஆனாலும்
அன்பெனும் காதல்
காதலெனும் அன்பு
யாரையும்
நோகடித்த
சேதியில்லை ...
நிஜமெது கேள்
நீ எதிர்த்தாலும்
சொல்கிறேன் ...
மனிதர்களுக்குத்தான்
பாவம்
காதல் யாதெனப்
புரிந்துகொள்ள
வக்கில்லை !

பிரபா


 
 
குரங்கு
பொம்மைகளின்
கைகளில்
இருக்கும்
டெட்டி பியர்
பொம்மைகளைப்
பார்க்கையில்
என் கைகளில்
இருக்கும்
நீதான்
ஞாபகத்திற்கு
வருகிறாய்
அழகி !



 
மேகத்திலிருந்து
சிந்திய
மழைத்துளிகளை
எல்லாம்
தூண்டிலிட்டுப்
பிடித்துக்
கொண்டிருக்கையில்
மழையை விட
நீதான்
அதிகம் வந்து
இதயத் தூண்டிலில்
விழுகிறாய்
அழகி !




எத்தனை முறை
உருட்டினாலும்
இரண்டே விழும் ,
இரண்டும் ஒன்றாய் விழும் ...
விழுவது இதயம் ,
வெல்வது காதல் !
ஒரு வித்தியாசப்
பகடைக்காய் ,காதல் !

 

 

எங்கோ
உன்னைப்
பறக்க
அனுமதித்ததும்
 நான் தான் ,
எங்கெங்கோ
உன்னை தேடி
அலைவதும்
அதே நான்
தான் !  
 

உன்
மௌவல் புன்னகையில்
ஒருகையும்
மௌனப் புன்னகையில்
ஒருகையும்
அள்ளிக்கோர்த்து
அதிலெழும் வாசத்தில்
நிலவொன்று செய்து
"நீ" என்று பெயர்
வைத்து
வானத்தில்
ஏறி விட்டுவிட்டு
வந்திறங்கித்
தரையில் அமர்ந்து
பேசாமல்
பார்த்துக் கொண்டே
இருக்க ஆசை !

பிரபா


வெறும்
மண்ணாய்
இருக்கும்
என் நெஞ்சை
எல்லாம்
அள்ளிக்குவித்து
அன்புக்கோயில்
கட்டி
விளையாடும்
காதல்,
உனக்கு மட்டுமே
தெரிந்த
உன்னதக்கலை !


 
எத்தனை
கோடிகள்
கொட்டிக்
கொடுத்தாலும்
நான் விட்டுக்
கொடுக்காமல்
இருக்கும்
ஒரே இடம்
உன்
ஐ.லவ்.யூவின்
இடம்
மட்டும் தான் !
அதுதான்
எப்பவுமே
டாப்பு !


என்றேனும்
என்
மகிழ்ச்சிநியூரான்கள்
முழுதும்
அலையடித்து
நான் கிறங்கிக்
கிடந்தால்
அதற்குக்
காரணம்
ஜில்லெனும்
உன் முத்தமாகத்
தான் இருக்கும் !


Pic By : Makka Photography

நிமிடத்திற்கு
நூறு
முறையாவது
உன்னைப்
பார்ப்பேன் !
அப்போதெல்லாம்
ஒரு ஆயிரம்
புன்னகையாவது
உன் கன்னக்குழியில்
இருந்து
பறந்து வந்து
என் உதடுகளில்
ஒட்டிக் கொள்ளும் !


"நீ"
என்பதிலும்
"நான்"
என்பதிலும்
ஒளிந்திருக்கும்
சுயநலச்
சாயத்தை
அழித்து
அதில்
அன்பு கலந்து
"நாம்"
என்றாக்குவது
காதல்


 
எந்த
வகையான
பைத்தியம்
வேண்டுமானாலும்
எனக்குப்
பிடித்துவிட்டுப்
போகட்டும்....
உன் அன்பை
மறக்கடிக்கிற
பைத்தியத்தைத்
தவிர !



சொர்கத்தின்
சாவிகள்
மொத்தம்
ரெண்டு !
ஒன்று நீ
இன்னொன்று
காதல் !
ரெண்டயுமே
கடவுளிடமிருந்து
திருடிக்
கொணர்ந்துவிட்டேன் !:)


   
எத்தனை
கோபமானாலும் ,
தூங்கி எழுந்து
"ராத்திரி நமக்கு
ஏதும் சண்டையா
என்ன ?"
என்று கேட்கிற
உன்னை நான்
என்ன தான்
செய்வது ?
மேலும்
காதலிப்பதைத்
தவிர!
 

11 comments:

  1. நீளமான தொகுப்பு !
    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நல்ல கவிதைகளை எழுதுவதில் உனக்கு நிகர் நீயே !! வழக்கம் போல பொறாமை பட்டு வேடிக்கை பார்க்கிறேன் பிரபா <3
    ""நீதான்
    அதிகம் வந்து
    இதயத் தூண்டிலில்
    விழுகிறாய்"" அற்புதமான வரிகள்

    ReplyDelete
  3. அழகான வரிகள்,
    அருமையான படைப்பு.........
    ரொம்ப நல்லாருக்குங்க......................
    ஒரே இடம்
    உன்
    ஐ.லவ்.யூவின்
    இடம்
    மட்டும் தான் !
    அதுதான்
    எப்பவுமே
    டாப்பு !என்ன ஒரு ரசனை.....
    அப்பப்பா................

    ReplyDelete
    Replies
    1. Haha:) :) Happy to read your comment Thank a million Vinoth ! :)

      Delete
  4. காதல் மிளிரும் வரிகள்...

    அத்தனையும் அற்புதம்

    ReplyDelete
  5. Nice dude really liked it :)

    ReplyDelete