Sunday, January 16, 2011

பூங்கதவே தாழ்திறவாய்

காதல் காதல் என்றெழுதிக்
கவிஞனானேன் !  
அன்பு அன்பென்று சொல்லி
மனிதனானேன் ! 

ஆசையின் வழி - அட்டகாசம் !
வெறித்துத் தவிர்த்தேன் !

அன்பிற்கு வழி - அடர்காடு !
விரும்பி நுழைந்தேன் !

கத்துவதும் கதறுவதும் 
கைநீட்டிக் கெஞ்சிக் கொண்டும்   
வந்து விட்டேன்...
பாதித் தொலைவு !
மீதிக் கவிதை எழுத நேரமில்லை... !
யாரேனும் என் 
கவிதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து 
உங்கள் 
காதலிடம் கூட்டிச் செல்லுங்கள்  !!


2 comments:

  1. Bale Prabu ji @ This is ur frst visit it seems .. thnx for being here ... thnx for ur coment too ..!!

    ReplyDelete