Thursday, December 17, 2009

கல்லறை கடிதம்

*இதோ .,
 இவள் .,
 திறக்காமலேயே
 கிழித்தெறிந்த
 என் காதல் கடிதத்தை ,
 ஓட்டுப் போட்டு
 வைத்திருக்கிறேன்!!


*என்னோடு  உயிரில்லாமல்நான்  
 மண்ணோடு மண்ணாகிப்
 போன பின்பு ,
 என் வலிகள் சுமந்த
 இவ்வெள்ளைத்தாளாவது
 உயிர் பெற்று வாழட்டும் ..!!

*என் உயிருக்கு நெருக்கமானவர் எவரேனும்  .,
  இதை என் கல்லறை மீது
  செதுக்கி வையுங்கள் .,

யாருக்கும் தெரியாமல்
அதை படித்து விட்டு
என்றாவது  ஓர்நாள்
காதலித்தாலும் காதலிப்பாள் - என்னை !!

பேதைப் பெண் !! பணக்காரக் காதலி !!

No comments:

Post a Comment