Sunday, November 8, 2009

சுவர்களின் எதிரொலி


  மாடிப்படிகளின் குறுகிய வளைவுகளில்,
  இப்போழ்தெல்லாம் கொஞ்சம்
  மெதுவாகவே கடந்து போகிறேன் !                                       

  ஆம், அன்று                                        
  நாம் முத்தமிட்ட சப்தங்களை ,
  சுவர்கள்,
  இன்றும் எதிரொலித்து கொண்டுதான்
 இருக்கிறது அழகி !!
                                         
  உயிரில்லாத சுவருக்குக்  கூடக்
 கேட்கிறதே நம் அன்பின் சப்தம்!

  உயிருள்ள மனிதர்களுக்கு மட்டும் ஏன்
  அது கேட்பதில்லை  !!?

  உன்னை தொலைக்கப்போகும்
  அத்துனை நொடிகளையும்
  திட்டிக்கொண்டே , உன்
  பிரபா !

                                      

No comments:

Post a Comment