Monday, November 9, 2009

நிழற்குடையில் அமர்ந்திருக்கும் நிலவு

பேருந்துப் படிகளில் நான்
நின்றுகொண்டே தவமிருப்பதை 
பார்த்தோ என்னவோ !


நிழற்குடையில் அமர்ந்திருக்கும்
நிலவு ~ நெஞ்சை
கொள்ளையிட்டுப் போகிறது !


ஆம் ,
எனக்கே சொந்தமான இருவரிக்கவிதை -
அவள் ஈரஇதழ்களிலிருந்து தெறிக்கும்
புன்னகை - என் கன்னங்களை
முத்தமிடும் போது


இதயம் ஒரு கனம் உறைகிறது !!
இன்னும் நம் காதல் விரிகிறது !!!

No comments:

Post a Comment