Thursday, March 29, 2012

என் இனிய தலையணையே...


என் அணைப்பிலேயே 
தூங்கும் தலையணையை 
எத்தனை தடவை 
உன் பெயர் சொல்லி 
அழைத்திருப்பேன்!

எத்தனை தடவை 
அதை கேட்டிருப்பேன் 
என்னைப் பிடிக்குமா 
என்று !? 
எத்தனை முறை 
முத்தமிட்டிருப்பேன் 
சப்தமில்லாமல் 
ஒவ்வொரு இரவும் !
எத்தனை முறை 
சிரித்திருப்பேன்,
எத்தனை முறை 
சினந்திருப்பேன்.., 

அத்தனை நொடியிலும்
அதுவும் சேர்ந்து
உன்னைப் போலவே  
மௌனப் புரட்சி
செய்கிறது !

கேட்பதை, கொடுப்பதை
எல்லாம்
வாங்கி கொண்டு , 
என் கேள்விகளுக்கும்
காதலுக்கும்
என்றைக்குதான்
பதில் சொல்லப்
போகிறதோ 
என் இனிய  தலையணை !!
  

3 comments:

  1. apadi oru alagu prabha palar ariya sogamum sugamum arindhadhu oruvarin thalaiyanaiye!!!!!

    ReplyDelete
  2. Mounathai vidavum migacirandha bathil undo anbai velipadutha . . . . ?

    ReplyDelete