Sunday, May 30, 2010

நாய் வாங்கிய ரகசியம்

தேதி எல்லாம் தெரியவில்லை
தெரிந்தது இதுதான் !
அது ஒரு மாலை நேரம் !

மழை மேகமெல்லாம் ஒன்றுமில்லை !
அனல் வெயில் கொஞ்சம்.!

நடக்கிறாயோ? தவழ்கிறாயோ ?
ஒரே வியப்பு.!
அப்படித்தான் கானல் நீர் போல்
பட்டும் படாமலும் தரையில் கால்பதித்து
நடந்து சென்றாய் என் கண் முன்!

வழியில் குறுக்கிட்ட
நாய்க்குட்டியைப் பார்த்ததும் மனதில்
ஒளித்து வைத்திருந்த பயத்தையெல்லாம்
அவிழ்த்து  விடுகிறாய் ஒரே அடியாய்!

நொடி ஒன்றும் தாமதிக்கவில்லை !
ஓடி வந்து என் பின் ஒளிந்து கொண்டாய்!

உன் இரு கைகளும் என் அஞ்சு விரல்களில் 
தஞ்சம் கொண்டு விட்டது  .!
(வந்தது நாயல்ல அழகி !
நான் வணங்கும் சாமி தான் அது!)

நாட்கள் கொஞ்சம் போனது!
உன் வீட்டில் நீ இருந்த நேரம் போய்
இன்று  நம் வீட்டில் நாம் இருக்கிறோம்!
ஆம்!

காதலித்துக் கொஞ்சியது பத்தாமல்
கைபிடித்துக் கூட்டியே வந்து விட்டேன் !
உன்னை என் மனைவியாய்!

வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் நான்  
உனக்கு பிடித்தவைகளாய்
மாற்றிக்கொண்டிருந்த நேரம் அது!

ஒன்றே ஒன்றை மட்டும் உனக்குப்
பிடிக்காதென்று தெரிந்திருந்தும்
வேண்டுமென்றே செய்தேன்!

தொலைபேசி விளம்பரம் என் ஆசையை 
நாய்குட்டியிடம் கூட்டி சென்றது !
கரடி மாதிரி ஒரு நாய் வாங்கி வந்து
வீட்டு வாசலில் கட்டி வைத்தேன்!!

அன்று முதல்,
உனக்கு பிடிக்காத விஷயங்களில்
நாயுடன் நானும் சேர்ந்து கொண்டேன் !

ஒரு வாரத்துக்கு பின்
நிலைமை பழமைக்கு மாறிவிட்டது !

ஒவ்வொரு முறை நீ
வாசற்படியைக் கடக்கும் போதும்
குறைத்து தள்ளுகிற நாய்குட்டிக்கு பயந்து
என் நெஞ்சில் வந்து
சாய்ந்து கொள்கிறாய் நீ !

இப்போது புரிந்திருக்குமே !
நான் நாய் வாங்கிய ரகசியம்..??!!!!!

4 comments:

  1. very nice man... keep it up..

    ReplyDelete
  2. மிகவும் நன்றாக உள்ளது, ஆனா நம்ம கல்லூரில அப்படி ஒரு அழகி இல்லையே? யாரை நினைத்து எழுதுகிறீர்கள்?
    >>ஷதீஸ் பழனி<<

    ReplyDelete
  3. நன்றி சதீஷ் பழனி ! 'அழகி'ன்றது என் காதலியோட 'புனைப்பெயர்'ங்க

    ReplyDelete
  4. நன்றி தி லெஜன்ட் !

    ReplyDelete