Saturday, July 31, 2010

அழியும் ஒரு நாள் நிலவு - அன்றே நானும் கூட!

உன்னை என்றுமே
மறக்கப் போவதில்லை !!
 
என்று நான் எத்தனை
பொய்க்கவிதை எழுதினாலும்
நீ படித்துவிட்டு பிடித்திருக்கிறது
என்று தான் சொல்லப்போகிறாய்!
 
இப்போதாவது நிசம்
என்னவென்று கேள்! !
 
உன்கூடவே இருக்கவேண்டும்
என்ற என் ஆசை ஒன்றும்
கடைசி வரைக்கும் இல்லை அழகி ! !
 
நாளை, நிலவும் சூரியனும் வானிற்கு
அழகு சேர்க்கப் போவதில்லை
என்று சேதி வரும் நாள் வரைக்கும் மட்டுமே!!
 

Wednesday, July 28, 2010

ஆறு பில்லியனில் அன்பிற்காக ஒரு தேடல்..

ஆறு பில்லியன் உயிரினங்களில் இல்லாத 
எந்த அம்சத்தை நீ சொந்தமாக்கிக் கொண்டாயோ...?
என் அத்தனை துடிப்புகளும் உனக்காக மட்டுமே 
தொடங்கி முடிகிறதே அழகி...!!

Friday, July 23, 2010

ஒரு ஊஞ்சலின் புலம்பல்!

உயிருக்குள் உணர்வாகவும் 
உணர்வுகளுக்குள் உயிராகவும்
என் விதிக் கவிதையில் 
கடைசி வரை நிலைக்கப் போகும் 
முற்றுப்புள்ளியே ! 
என் முழுநிலவு அழகியே! கேள்..!!

நீயும் நானும் ஊருக்கு தெரியாமல்
ஓடிபிடித்து விளையாடிய இடத்திற்கு 
நெடுநாட்களுக்கு பின் 
நேற்றுதான் சென்றிருந்தேன்!

ஆலமர விழுதில் 
அன்று யார் முடிச்சோ?
அந்த ஒற்றை ஊஞ்சல்
வாழ்வதற்கு பயந்து 
தொங்கிவிட்டது கயிற்றில்!

உயிரில்லாத ஊஞ்சல்களின் 
அருகில் நின்று பார்த்தேன்!
லேசாக அசைந்த ஊஞ்சல்., 
தான் உயிரோடிருக்கும் சேதியை
என் செவிகளுக்குள் 
காற்றாகிச் சொன்னது..!

காற்றில் அசைந்த கட்டை ஊஞ்சல் 
என் நினைவுகளை இடித்து 
சட்டைக் காலரை பிடித்துக் கேட்டது..!

என்மடியில் அவளும் 
அவள் மடியில் நீயும் அமர்ந்து 
அழகு சேர்த்த நாட்களை 
எங்கே தொலைத்துவிட்டாய்?
"எங்கடா உன் அழகி..??" என்றது ..!

ஊஞ்சலின் கால்களில் வீழ்ந்து 
அவள் பாதச் சுவடுகள் அன்று 
உதைத்த மணல்களின் மடியில் 
இருவரி எழுதிவிட்டு எழுந்தேன் ....!

மன்னித்து விடு ஊஞ்சலே..! 
உன் கேள்விகளுக்கு!
என்னிடம் மௌனத்தில் கூட பதில் இல்லை..!    


Sunday, July 18, 2010

அந்த ஒரு நிமிடம்

அந்த ஒரு நிமிடம் !
சாத்தியம் தான் 
என்று என்னோடு 
சண்டை போடுகிறது  மனம் ! 

நம்மை சுற்றி இருக்கும்
உலகம் இன்னும் அழியத்
தொடங்கவில்லை!

நம் இதயம் ஓய்ந்து 
நிற்கப்போகும் நொடியும் 
ஒன்றும் அருகிலில்லை!

இப்பவும் உன் கண்களைப் 
பார்த்த நொடியில் 
அழுகை வரும்!

அடுத்த நொடியிலேயே 
என்னை சிரிக்க வைக்க 
உனக்கும் தெரியும் ! 

ஒருகையில் என் கண்களைத் 
துடைத்துக்கொண்டு 
மறுகையால் உன் 
கைகளைப் பிடித்துக் கொண்டு,

உன்னைக் காதலிக்கிறேன் என்று
சொல்வதற்கு நேரமிருக்கிறது!

"நீதான் இல்லை"

"எல்லாம் இருந்தும் எதுவுமில்லை " 
என்ற பழமொழிக்கு .,
அர்த்தம் தெரிய வைத்தமைக்கு
 நன்றி! அழகி ! 







Saturday, July 17, 2010

அழகி - நினைவுகள் நடத்தும் டூரிங் டாக்கீஸ்

என் நினைவுகள் கட்டிய  டூரிங் டாக்கீஸில் தினமும்  இரவு நேரக் காட்சி நீ ! மூன்று மணிநேரக் காதல் முடிந்ததும் சுவர்க்கடிகார முள் காட்டும் நேரம் " ஒன்று "!  நம் பிரிவை தாமதமாய் அறிந்த விதியும் இப்போது நம் அன்பைப் பார்த்தால் அழுதுவிட்டுப் போகும்! அப்படிப்பட்ட உன் பிரிவிற்குப் பின் என் இரவெனும் பகலை எப்படிக் கடக்கிறேனென்று நீயே பார் அழகி!


மணி 1 : 20  :  நான் இன்னும் தூங்கவில்லை

மணி 1 : 21 :  அனுமதி இல்லாமல் என் நினைவுகளை திரும்ப வந்து ஆக்கிரமிக்கிறாய்

மணி  1 : 22 :  நீ முதன் முதலில் என் விரல்களை பிடித்த நினைவுகளை அசைபோட நினைவு படுத்துகிறாய்! 

மணி  1 : 23 :  என் கறுப்புக் கைகளை உன் வெண்ணிறக் கரங்கள் பிடிக்கையில் நம் கண்கள் பேசிக்  கொண்ட மொழி எனக்கு ஞாபகம் வருகிறது!

மணி  1 : 24 :  நான் சிரிக்கிறேன்!  


மணி  2 : 00 : நான் உன்னோடு இருக்கையில் உனக்கு ரொம்ப பிடித்த பொழுதுபோக்கு! என் தொடைகளை  கிள்ளி வைப்பாய்!உனக்குப் பிடிக்கும் என்று வலியை மறைக்க நினைத்தாலும் வழி தாங்க முடியாமல் கத்தியிருக்கிறேன்! உன்விரல்கள் என்மேல்பட நான் எவ்வளவு வரம் வாங்கியிருக்க வேண்டும்!

மணி  2 : 25 :  மறுபடியும் உன் நினைவுகள்

மணி  2 : 45 :  உன் தோள்களில் சாய்ந்துகொண்டு உன் உதடுகளை வருடிக்கொண்டிருந்தேன்! என் விரல்களால்!

மணி  3 : 00 :  விழிப்பதற்கு சத்தியமாய் எந்தத் தெம்பும் இல்லை! தூங்கச் சொல்லும் அப்பாவின் அதட்டல்களை மீறி இன்னமும் நான் விழித்து தான்  இருக்கிறேன்!

மணி  3 : 45 :  சாமி சத்தியமாய் இன்னும் தூங்கவில்லை!


மணி  4 : 00 :  நீ !  நீ !  நீ மட்டுமே!
 
மணி  5 : 00 : என்னோடு நீயில்லை என்று இப்போது தான் நினைவிற்கு வருகிறது! கூடவே அழுகையும்!

மணி  6 : 05 :  எப்படியோ என் நினைவுகளை விட்டு வெளியேறி விட்டாய்! ஆனால் கொஞ்ச நேரத்தில் இதயக்கொட்டகையில் வந்தமர்ந்து கொள்கிறாய்!

மணி  7 : 00 :  அப்பாடா ! எப்படியோ தூங்கிவிட்டேன்!
 
 மணி  8 : 20 :  கல்லூரிக்கு சென்றுகொண்டிருக்கிறேன் !


Friday, July 16, 2010

உன்னை விட மற்றவரிடம்!

சிலநேரங்களில் உன்னைவிட
இன்னொரு பெண்ணிடம் 
அதிகம் பேசவேண்டும் 
போலத்தான் இருக்கிறது..!!
ஆம்..!
பேசுவது உன்னைப்பற்றி 
மட்டுமாய் இருந்தால்!



Wednesday, July 14, 2010

கணக்கு நோட்டுக் காதலி !

எத்தனையோ திமிங்கலங்கள் 
உலகினில் இருந்த போதும்
ஏனோ இந்தச் சின்ன மீனைநீ 
இரசிப்பதாய்ச் சொன்னாய்!!
சாதிமதம் காசுபணம் ,
செகப்பு வெள்ளை கறுப்பென்று,
கணக்குப் போட்டுக் காதலிக்கும் 
இந்தக் காலத்துக் காதல்-உனக்கு 
சுட்டுப்போட்டாலும் வராது போல 
அழகி!


         Thanks for filling me in every single pages of your life !! Love you azhagi. . .!!


Tuesday, July 13, 2010

காலக் கண்ணாடியில் காதல் பிம்பங்கள்

உன் நினைவுகளைக் 
கண்ணாடியில் காட்டிப்பார் !

என் கைகளைக் 
கட்டியணைத்துக் கொண்டு ,
'விடமாட்டேன்' என்பது போல்,

உன் வீட்டு கதவுகளை நீ  
அடைத்த நேரங்களின் பிம்பங்களை ,
நீஎனை  விட்டுப் போனபின்பும் 
இன்றும்கூட பிரதிபலித்துக்கொண்டு 
தான் இருக்கிறது ..!!

இது, 
கடந்துபோன காலக் கண்ணாடியில் 
முடிந்து போன காதல் பிம்பங்கள் !

ரசித்த கனவு !

நான் கண்ட கனவுகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த கனவு
"நீ " மட்டும்தான் ! ஆம்! நினைவை விட்டு மறக்காத  கனவு
     நீ மட்டும் தான் அழகி!

உன்னைப் பிடிக்கும் நொடிகள்

இரண்டு தருணங்களில் ஏனோ
உன்னை ரொம்பவும் பிடித்துப் போகிறது
ஆம் .,
1 . கனவுகளிலும் ! 2 . நிஜங்களிலும் !