Sunday, August 29, 2010

அன்பிற்கும் உண்டாம் அடைக்கும்தாழ்

பிறவிப்பயனை பெறாமல் நோகும்   
என் ஆட்காட்டி விரலில் - சுட்டி 

அழகி இவள்தான் ,
என் அழகி இவள் தான் என்று 

கேட்கிற அனைவரிடமும் 
சொல்லி மகிழ வேண்டும் 
போல இருக்கிறது ..

ஆனால் உன்
அன்புக்கட்டளைக்குள் 
அடைபட்டுக் கிடக்கிறேனே
அழகி .,

ஏன் ? நீ என் ' பொண்டாட்டி ' 
என்பதைத் தவிர 
வேறு எதையும் யாரிடமும் 
சொல்ல வேண்டாம்
என்று தடுக்கிறாய் ?

ப்ச்ச்ச் ....!!! போடி  .!

 ஒன்று மட்டும் நிச்சயம் அழகி !

இயற்கையின் அழகிற்கு ...
 நம் காதல் - 
ஒரு முன்னேற்ற மயில்கல்.!

ஊருக்கு சொல்லமுடியாமற் போன   
நம் அன்பின் உன்னதமோ 
இயற்கையின் அழகை 
குறுக்கிட்டு மறிக்கும் 
 மதில்சுவர் தடங்கல் ..!!


Tuesday, August 24, 2010

ஒரு வேப்பங்குச்சி உயிர்பெறுகிறது


சம்பவம் நிகழ்ந்த இடம் : திருச்சி மலைக்கோட்டை இரயில் நிலையம்   

நேரம் : ஒரு மணி வண்டிக்கு ஐந்து நிமிடம் இருக்கிறது !


"ஊரெங்கும் முடிந்து விட்டதாம் 
அரங்கேற்றம்! என்னை
உயிரெடுக்க வந்துவிட்டது
காற்று "

என்று புலம்பிக் கொண்டிருந்தது 
மரநிழலில் ஒடிந்து கிடந்த 
ஒற்றை வேப்பங்குச்சி!

என்னைப் பார்த்ததும் அது
மண்ணை ஈரமாக்கி 
மேலும் அழ ஆரம்பித்தது..

அட நிறுத்தடி! கிறுக்குபய குச்சியே,
என்று சொல்லிக்கொண்டே புழுதித்  
தரையில் அமர்ந்தேன்.!

விதி ஒடித்த தன் நிலையை   
வேதனையாய்க் கதை சொன்னது ..!!

எல்லாம் விதிதான் எதற்கிந்தப் புலம்பல் ?
விடுவிடுவென ஆறுதல் சொல்லி 
விறுவிறுவென 
ஏந்திய குச்சியில் 
கட கடவென எழுதி முடித்தேன் 
மண்ணில்!

"அழகி " 
என்று உன் பெயரை 
அழகு  கொஞ்சமும் குறையாமல்..!
அப்பாடா..!
வேப்பங்குச்சியின் விதி 
புதுபிக்கப்பட்டது!
உன் பெயரெழுதிய காரணத்தால் 
அது 
என் மர(அலமாரியில்)   
பொக்கிசமாக்கப் பட்டது ! 



DESTINY is that which tries to DIVIDE us!

DIVINE LOVE is that which dies to UNITE us!

Saturday, August 21, 2010

இல்லாமையில் இருக்கிற உண்மை - ஒரு உண்மை சம்பவம்

பிரபா ..
எனக்காக ஒரு கவிதை சொல்லேன் 
என்று கேட்டாய் நீ!

திடீரென்று கேட்டதால் 
திக்குமுக்காடிப் போனேன் நான்!

( சரி எதாச்சும் மொக்க போடுவோம்)..

சொல்கிறேன் கேள்!

ஒன்றும் ஒன்றும் இரண்டென்றேன்!
சரி என்றாய் !

இரண்டும் இரண்டும் நான்கென்றேன்!
சரிசரி என்றாய்!

நான்கும் நான்கும் எட்டுடி நாயே என்றேன் 
செல்லமாக!

"பிச்சுபுடுவேன்" என்றாய் அதற்குமேல்
செல்லமாக!

எட்டும் எட்டும் எத்தனடி என்று கேட்டேன் !
பதினாருடா பண்ணி என்றாய் !

முடிந்து போனது கவிதை 
முத்தம் கித்தம் தர்றது 
என்று கேட்டேன்!!

முரட்டுப் பார்வையில் 
சிரித்தே சிதறடித்தாய்!
எனக்கு 
முன்னூறு முத்தம் 
பெற்றதைப் போல் இருந்தது!

 இப்படி கிறுக்குத் தனமாய் 
கவிதைகள் எழுதுவது நான் மட்டும் தான் என்றால்
கிறுக்குத்தனத்தில் உறைந்து கிடக்கும்
அத்தனை காதலையும் 
உணரக்கூடியவள் நீ மட்டும் தான் அழகி .!

Tuesday, August 17, 2010

அன்புக்கோழை -அழகியின் நினைவில்

 அழுகிற முகமெலாம்
கோழைத்தனத்தின் முகவரி தான்!
யார் இல்லையென்றது ? 

நாம் அருகிலிருந்த நொடி எல்லாம் 
காற்றில் தூசியாகி கைவிட்டே போய்விட்டது.!
நகர்கிற நிசிகளில் தூக்கமென்பது 
தொடரும் பகல் கனவாகி விட்டது.!

தொலைவுகள் கடத்திசென்ற அழகியின் குரல் 
அரைமாதத்திற்கு  ஒருமுறை கேட்கிறது!
"கிறுக்கா.! .....
என்று தொடங்கும் அந்த வீணையோசை
எனக்கே தெரியாமல் என் கண்களை அறுத்து
இதயத்தை கோழையாக்கிவிடுகிறது..!!!

ஆம்.!
அழுதுவிட்டேன்! அன்புக்கோழை .!
என்னசெய்ய நான் ?

உப்புக்கண்ணீரும்  உனக்காக அழும்போது
இனிக்கத் தானே செய்கிறது! அழகி!
 

Friday, August 6, 2010

சாதிகள் வாழ்கிறது ! சாவதென்னவோ அன்புதான்!


விடியல் தொடங்கி முடியும் இரவு வரை 
வெள்ளைப் பெட்டிக்குள் என் 
உலகமே உறைந்து கிடக்கிறது !

செயர்க்கைகோள் விளையாட்டில் 
சிகரமே அடைந்து கிடக்கையில் நம் 
சேர வஞ்சிக்கு மட்டும் விதிவிலக்கோ அழகி ?

நன்றாகவே தெரிகிறது நீயும் நானும் 
வாழ்ந்துகொண்டிருக்கும் தெருத்தடம்!

கூகுள் மேப்சில் இத்தனை ஊரிருக்க 
குற்றமென்று நம் அன்பை சொன்ன 
இந்த ஊரிலா நாம் பிறந்திருக்க வேண்டும்?

சாதிகளும் சண்டைகளும் இல்லாத 
ஊரினில் பிறந்திருக்கலாம் .,
சாகும் போதும் உன் 
மடியினில் கிடந்திருப்பேன்.!

அரிவாள்கள் அன்பை எதிர்க்கும் கொடுமை 
எந்த ஊரினில் இல்லையோ அங்கு
பிறந்திருக்கலாம் நாம்..!!
அறுபது ஆண்டடுக்கு பிறகு
வரலாறாகி இருக்கும் நம் அன்பு .! 

மானம் மரியாத சாதி சனம் 
கோத்திரகுலமேன்று 
சேற்றினில் கலக்க படுகிறதே ..!! 
செந்தாமரைக் காதல்கள் .!
அது இல்லாத ஆயிரம் ஊரினில் 
ஏதாவது ஒன்றினில் பிறந்திருக்கலாம்..!

மத்திய அரசு வேலையும் 
மாதம் முப்பதாயிரமும் போதும்!
மாப்பிள்ளை தங்கமாமே.!??

காசும் பணமும் இல்லையெனில் 
காதலும் குணமும் பித்தளையாம் ..!
ச்ச்ச்சீ !
இந்தக் கன்றாவிகள் இல்லாத ஊரினில்
நாம் பிறந்திருக்கலாம்!

ஆணும் பெண்ணும் கைகோர்த்து நடந்தால் 
ஆட்டம் போடுது பார் " சிறுசுகள் " 
என்கிறார்கள் - அந்தச் 
சிறுசிலிருந்து வந்தப் பெருசுகள் .,
சில்லறைத்தனமாக பேசும் பேச்சுக்கள் நம்
செவிகளுக்கு எட்டாத 
ஏதாவது தேசத்தில் பிறந்திருக்கலாம்!

சதை உணர்விலா அன்பு-அது 
இது எனத்தெரிந்திருந்தும் 
சவுக்கிலடித்துப் பிரித்துவைக்கும் 
சாதிகள் இல்லாத நாட்டில்   
சோறு தண்ணி இல்லையெனினும் 
பரவாயில்லை .!
ஒருநாளேனும் வாழ்ந்துவிட்டுச் 
மடிந்திருக்கலாம்.!
கணவன் மனைவியாய் !

சாதிச் சுடரில் ஒளிர்கிறது இந்தியா !!
சப்தமில்லாமல் எத்தனையோ 
காதல்களை சாகடித்து !  

Tuesday, August 3, 2010

உதவாக்கரைக் காதலன்

ஒன்றை  .,
எதற்குமே உதவப்போவதில்லை 
என்று தெரிந்திருந்தும் ,
சிலசமயம் "அது வேண்டும் " என்று 
குழந்தைத்தனமாய் கேட்பாய்..!

நன்றி அழகி !

உன் குழந்தைத் தனத்தினால் 
வாழவைக்கப்பட்ட பலவற்றுள் 
நானும் ஒருவன்!

என்னையும் நீ அப்படித்தானே 
கேட்டாய்!
" பிரபா., நீ வேண்டுமென்று ! "