Wednesday, August 3, 2011

ஒரு பூ சிரிக்கிறது


அதிகமாக மலரை நேசிக்கிறவர்கள் 
அதைச் செடியிலேயே 
சிரிக்க விடுகிறார்கள் ! 

அழகி !,
நீ மலரில்லை என்று சொன்னாலும் 
அதைஊர் நம்பப் போவதில்லை !

நான் உனைப் பறித்துக் கொண்டுவிட்டேன் 
என்று சொன்னாலும் 
அது உண்மையாகப் போவதில்லை !

எங்கோ இருக்கிறாய் ! 
என்னமோ செய்கிறாய் !

இன்னும் நீ செடியில் பூதான் !
அழகி !
எங்கோ நீ 
சிரித்துக் கொண்டே இரு !
இங்கே  நான்
ரசித்துக் கொண்டே இருக்கிறேன் !

இந்தக் கவிதையும்  அன்புமே  
நம் காதல் வரலாறெழுதும் !
 L o v e  Y o u  A z h a g i !