Saturday, December 4, 2010

காதல் நம்பர் : 123 ( One hundred and twenty third love )

KarurPrabha@anaathaikathalan


ஒரு தடவை தான் காதல் வரும்!
என்று எவன் சொன்னான் ? 

சேறு சகதிகளைக் கடந்து தான் 
ஆற்றுநீர் கடல் சென்று சேர்கிறது! 

சேற்றுக்குள்ளேயே சிக்கி 
இருப்பவர்களுக்குச் - சின்ன 
ஆற்றோடு முடிந்து விடுகிறது 
காதல்! 

ஆற்றைக் கடந்து அடியெடுத்து வை ! 
அன்புக் கடல் பெருசு நண்பா! 

ஆயிரம் வசனம் ஊருக்குத் தெரியும் 
அது பேசிக்கொண்டே தான் இருக்கும் ! 
விட்டுவிடு !

உன் வசனத்தை நீயே எழுது ! 
உன் வீணையை நீயே வாசி ! 

மற்றவரின் பேச்சுகளின் மேல் 
தூக்கி வைத்திருக்கிற 
உன் அன்பையும் காதலையும் 
இறக்கி வைத்து நீயே சுமந்து செல் !!  

எந்தத் தோளில் உன் அன்பை 
இறக்கி வைக்க முடியுமோ ! 
அங்கு செல்லும் வரை தேடல் தொடர் !! 

ஆயிரம் காதல் கூட தவறில்லை!! 
ஆசைக்கு ஏங்காமல் 
அன்பிற்கு ஏங்கும் வரை!