Sunday, November 15, 2009

நிழலாகும் நிலவு


ஏதுமில்லா பகலிலும் இரவிலும் ,
எல்லாவுமாய் வந்த முழுமை -நீ !


அழுகை மட்டும் பழகிய உதட்டில்
புன்னகை விதைகளை விதைத்த அன்னை !!- நீ !


சோகம் மட்டுமே சுமந்திருந்த வயிற்றில்,
சுகங்களையும் சுமந்து கொண்டிருக்கிறாள் - என்
கவிதை புத்தகத் தாய் !


நிலவு மட்டும் நிறைந்திருந்த வானத்தில்,
நீ வந்தது முதல் நிலவு நிழலானது !!


சினங்களை சலிக்காமல் வெளிப்படுத்தும் என்
பழக்கங்களை , உன்
ஈர உதட்டின் இனிய முத்தங்களால் மாற்றியவள் ! நீ!!


வார்த்தை வாராமல் அழுது , மறுகனம்
வார்த்தை வராமல் சிரிக்க வைக்க யாரால் முடியும் ..!!?


வயிற்றில் சுமக்க விதியில்லாமல் , இதயத்திலேயே  என்
குழந்தையை சுமந்துகொண்டிருக்கும்
உன் ஒருத்தியால் மட்டுமே முடியுமடி!!! - என்
அத்தனை துடிப்பிற்கும் மொத்தமான சொந்தக்காரியே !!


Love u azhagi !!

Monday, November 9, 2009

நிழற்குடையில் அமர்ந்திருக்கும் நிலவு

பேருந்துப் படிகளில் நான்
நின்றுகொண்டே தவமிருப்பதை 
பார்த்தோ என்னவோ !


நிழற்குடையில் அமர்ந்திருக்கும்
நிலவு ~ நெஞ்சை
கொள்ளையிட்டுப் போகிறது !


ஆம் ,
எனக்கே சொந்தமான இருவரிக்கவிதை -
அவள் ஈரஇதழ்களிலிருந்து தெறிக்கும்
புன்னகை - என் கன்னங்களை
முத்தமிடும் போது


இதயம் ஒரு கனம் உறைகிறது !!
இன்னும் நம் காதல் விரிகிறது !!!

Sunday, November 8, 2009

சுவர்களின் எதிரொலி


  மாடிப்படிகளின் குறுகிய வளைவுகளில்,
  இப்போழ்தெல்லாம் கொஞ்சம்
  மெதுவாகவே கடந்து போகிறேன் !                                       

  ஆம், அன்று                                        
  நாம் முத்தமிட்ட சப்தங்களை ,
  சுவர்கள்,
  இன்றும் எதிரொலித்து கொண்டுதான்
 இருக்கிறது அழகி !!
                                         
  உயிரில்லாத சுவருக்குக்  கூடக்
 கேட்கிறதே நம் அன்பின் சப்தம்!

  உயிருள்ள மனிதர்களுக்கு மட்டும் ஏன்
  அது கேட்பதில்லை  !!?

  உன்னை தொலைக்கப்போகும்
  அத்துனை நொடிகளையும்
  திட்டிக்கொண்டே , உன்
  பிரபா !