Saturday, September 29, 2012

எப்படி நீயோ அப்படி நிலவு - 20 குட்டிக் கவிதைகள்

01


மன்னித்துவிடு
என நீ கேட்கும்
போது
மரணித்து
விடலாம்
போலிருக்கிறது !
நான்
கொண்டிருந்த
கோபத்தை
எல்லாம்
கொன்றிடலாம்
போலிருக்கிறது !
When you are sorry,
I almost feel like Killing my anger out of my heart.
02


எங்கிருந்தோ 
வந்துஎன் 
செந்நிறக் 
குருதியில் 
திடுமென 
நீ ஆர்ப்பரிக்கும் போது 
தலைக்கும்
காலுக்குமிடையில்
தறிகெட்டு
ஓடுகிறது
காதல் வெள்ளம் !
Gushing stream of You, fills my heart everywhere.
Then, Its like a "PLETHORA of YOU" fills me in.
03


அன்பின்
உச்சி கோபுரம் 
சாமி என்றால்
நீ என் சாமி !
இல்லை 
விஞ்ஞானிகள்
நாளை ஏதேனும்
புதுசாய்க்
கண்டறிந்தால்
அதுவும்
எனக்கு நீ !
அதற்கு
மேலும் நீயே !
The Greatest findings of science cum spiritualism
is 'YOU' for me
04


ஆங்கே 
கரையோரத்தில் 
அமைதியாய்
கிடக்கிறேன் !
அடித்திழுத்துப் 
போகிறாய் 
அன்பின் 
பெருவெள்ளம் நீ !
கைகட்டி 
வாய்பொத்திக்
கூடவே
வருகிறேன் !
அது வரம் !
அதற்குமேல்
எனக்கென்ன
வேண்டும்?
அது வரம்
அது போதும் !
# To the world's most 
ravishing pretty gurl - Azhagi ! ♥

05


எந்தத் 
திருவிழாவும்
அத்தனை 
விமரிசையாய் 
கொண்டாடப்
படுவதில்லை...
என்னை நீயும்
உன்னை நானும் 
கொண்டாடுவதைப்
போல !
You are the Soul-filled Colorful Festival
that I have ever celeberated ... ♥

06

என்மேல்
கோபப்படு ;
சுடுசொல்லாய் 
வீசி ஏறி ;
பிரிந்து போ ; 
பேசாமலிரு ; 
அழவை ; 
ஏங்கவை ; 
இதில் 
எதையாவது
செய்து தொலை !
உன்னோடு
இருந்து இருந்து
எனக்கு
இதெல்லாம்
என்னவென்று
மறந்துகொண்டே
இருக்கிறது ! :)
You fill my heart so nicely,
that I have forgotten the meaning
of what is so called 'WORRIES'
07


தோன்றி
மறையும் 
மாய
நாடகத்தில்,
அன்பென்னும்
கதாப்'பாத்திரத்தில், 
நாம் பொங்கி 
வழியவேண்டும் !
Here goes, the Chronicle of the Thamizh Letters :
அ - ஆதி ;
ன் - அந்தம் ;
ப் : பாத்திர வடிவத்தை கொண்டுள்ள - 'ப்' - நம் உடல் ,
உ - உயிர் !
அ + ன் + பு !
That's Wat, the Entire life Deals with ... ! Love ! ♥

08


ஆழிவெள்ளப்
பாசக்காரி 

அன்பின் 
பிள்ளையார் சுழி 

அழவைக்கும்
குட்டிப் பிசாசு 

கோபப்பட
வைக்கும்
பைத்தியக்காரி

கொஞ்சிக்
கிறங்கடிக்கும்
வெள்ளிவண்ண
தேவதை

பேசவைக்கும்
மூச்சுக் காற்று

பேசாமல்
கொல்லும்
மௌனக்கள்ளி

சிரித்துக் கதை
பேசும் நடமாடும்
நிலவு !

சில்லெனக்
குளிர்கிற
வெள்ளை
மழைத்துளி !

"ம்" எனும்
நொடியில்
ஜனிக்கும்
கவிதை !

இப்போதைக்கு
இவ்வளவு தான்..
எல்லாம் நீ தான் !
நீதான் எல்லாம் !
Pretty chirpy "Hmm" Sound of you
is almost like a heaven to me 
09


ஏதும் பேசாமல்
என் தோள் சாய்ந்துகிடக்கிறாய்...
இதற்காக மட்டும்
தனியாக ஒரு
பிறப்பெடுக்க 
வேண்டும்
போலிருக்கிறது.
அழகி!

You are lying on my shoulders
Should I find any other valid reason to dwell in ?
10


எதையோ 
பேசிக்கொண்டிருக்கும்
போது
இடையில்
குறுக்கிட்டு
நான் சொல்லும்
லவ்யூ'வை
நீ கண்டுகொள்ளாததைப்
போல் கடந்து 
செல்வது
என்னை
இன்னொரு தடவை
சொல்ல வைக்கும்
யுக்திகளில்
ஒன்றாகத் தான்
இருக்கும்
When I Interrupt you between 
the unstoppable chat , 
and Kiss you a love you. 
You will act like you didn't notice it.
I know , its the trick to get one 
more love you from ME ! <3 span="span">
11


ஆயிரம்
கவிதைகள்
எழுத
நேரம் கிடைத்தும் 
ஏதும் செய்யாமல் 
உன்னைப் 
பார்த்துக்கொண்டு
மட்டும் இருந்தேன் !
நெஞ்செல்லாம்
கவிதையாய்
நிரம்பி
வழிந்தோட
வழியில்லாமல்
மூச்சு முட்டிப்
போனது !
When I get time to write even Thousand poems.
I choose not to do it. and I simply Stare at you.
 accumulated poems overflows the heart.
12


நீ கொட்டும் 
'ம்ம்' எல்லாம்
என் செவிவழி 
நுழைந்து
இதயத்தில் 
தங்கிக்கொண்டு
இரவானால்
நட்சத்திரங்களாகி
மின்னிச்சிரிக்கிறது!
நானும் 
'ம்ம் ம்ம்'
சிரி சிரியென்று
ரசித்துக்கிடப்பேன்!
# awesome poems ur 'hmm's are!
ardent fan of those , I am!

13

பூமியில்
எல்லாம்
நாடகமென்று
தோன்றும் போது...
நீயும் உன் 
அன்பும்
நிஜமென்று
கொஞ்சநேரம்
சொல்லிக்கொண்டிருப்பேன்! 
நெஞ்சு கொஞ்சம்
நிசப்தத்தில்
இளைப்பாறும்!

You are the top most Virtue and Truth that Exists in the world
Which I surrender when I have no hope Left for living.
14


இயற்கை 
எழுதிவைத்த 
அழிக்கமுடியாத
விதி
காதல் !
நரம்புகளில்
குருதியில்
திசுக்களில்
எங்கே நீ 
இல்லை என
மறுத்தாலும்
அங்கெல்லாம்
வாழ்கிறது
காதல் !
Into the nerves, Deep inside the tissues
Lives the LOVE <3 p="p">
15


ஹ்ம்ம் ! 
நிலா
இன்று 
அழகாகத் 
தான்
இருக்கிறது
நீ
என்னை
பார்க்கச்
சொன்னதும் !

Moon Looks pretty more luminous,
When YOU asks me to see it.
16

Chemistry of Love : 

காதல் வேதியல் : 
டெஸ்ட்டோஸ்டீரோ'னும் 
ஈஸ்ட்ரோஜென்'னும் 
சேர்ந்து 
உன்னை 
என் கண்களுக்கு 
அழகு தேவதையாக்கிக்
காட்டினார்கள் ...
ரசித்தேன் !

அட்ரினலின்,
டோபமைன்,
செரட்டோனின்,
மூவரும் சேர்ந்து
எனக்குள்
பிரியத்தை
விதைத்தார்கள்...
பிரிய முடியாமல்
காதலிக்கத்
துவங்கினேன்!

ஆக்சிடோசினும்
வேசோபிரஸ்சினும்
நம் மூளைக்குள்
முத்தமிட்டு
கொள்ளட்டுமென்று
காத்திருக்கிறேன்...

ஊடல் கூடல்
கடந்து
காதல் வேதிப்
பொருள்கள்
நம்மை காலத்திற்கும்
கூடவே
வைத்திருக்கட்டும் ...
நாம் வாழ்க !
நம் காதல் வாழ்க !
Read about the above Harmon-es to 
get the intense meaning of the poem.
17


என்
வரம்
எதுவென்று
எங்கேயோ
தேடத் தேட
ஒரு குரல்
கேட்டுத்
திரும்பி
நின்றால்
நீ நான் நானென்று
சிரித்துக்
கொண்டிருக்கிறாய் !
♪ அட நீதானா
அந்தக் குயில் ♪

In the search of my Boon, an Instant voice hit me
with its chiseled coolness and when I turn to it
I See YOU ! Wao ! <3 it="it" love="love" span="span">
18


உன் தேவை 
நானாக 
இருக்கவேண்டும்
என்பதைத் 
தவிர 
என்தேவை 
வேறேதும் 
இல்லை !
Sort of world's sweetest selfishness !

19

மன்னித்துவிடு
என எத்தனையோ 
முறை
கேட்பதற்கு 
பதிலாக 
என் பெயர் 
சொல்லி 
ஒரு முறை 
அழை ..
இன்னும்
கொஞ்சம்
நேசிப்பேன்...
கொஞ்சம்
நிறையவே
நேசிப்பேன் !
Instead of being sorry, Call me by my name.
I will be chilled out then.
Its the cheapest trick ,
 by which my heart can be bought for.
20



எது
பேருண்மை 
என 
மதிப்பிட்டால் 
நூற்றுக்கு
தொண்ணூறு 
பெரும் அன்பு !
எதுவுமே 
நூறில்லை
எனினும்
அன்பே -
உண்மையின்
உயர்நிலை !
Top point of world
and profoundness 
sticked with it is
what we call
as 
.L.O.V.E.

5 comments:

  1. அருமை பிரபா !
    உலகின் அன்பெல்லாம் மொத்தம் சேர்த்து கவிதையாக்கி காதல் செய்கிறாய் <3
    தமிழை வாழ வைக்கிறாய் அன்பை ஊட்டி !
    என்றும் அன்புடன் ,
    திவ்யா <3<3<3

    ReplyDelete
  2. ivaikalai kavithakal endru ennai namba solkiray.
    illai unnudaiya unarvukal kalam kalamay thekki vaikkap patta kuruthi senkuruthi padappadum pothellam iraththam urainthu pokirathu kuruthi ... thodaratum

    ReplyDelete
    Replies
    1. Thanks for your kind words and Ethereal Comment Malathi :) Welcome to my Blog !

      Delete