Tuesday, November 30, 2010

ஒரு கோப்பைக் காதல்

KarurPrabha @ anaadhaikathalan

என் ஒரு கோப்பை நெஞ்சிற்குள் 
உயிருக்கும் உணர்வுக்கும் 
உனக்கும் சண்டை !

உயிரையும் உணர்வையும் 
தூக்கி எறிந்து விட்டு 
கோப்பைக்குள் நிறைகிறாய் நீ ! 
 ஆம் ! எல்லாம் நீயாக ! 

போதும்! இது போதும்!
நீயே நெஞ்சான பின் 
இதற்கு மேல் என்ன எழுத ?

உயிரற்று உணர்வற்றுநான் 
ஒன்றுமேயற்றுப்  போனாலும் ,

உன்னை உணர எனக்குத் தெரியும்,
என்னை உணர உனக்குத் தெரியும் 
நம்மை உணர அன்பிற்குத் தெரியும்!
இது பத்தாதாடி அழகி ??    

Thursday, November 25, 2010

காரணம் கேட்டால் காதலென்று அர்த்தம்


அப்ப  நான் உனக்கு புதுசு அழகி !
பழகிய கொஞ்ச நாட்களிலேயே
என் வரையரைற்ற அன்பிற்குக்
காரணம் கேட்டாய்  !

அப்போது கவிதையும் தெரியாதா எனக்கு ! 
எனவே
வார்த்தைகளையும் காரணத்தையும் 
தேட வேண்டி இருந்தது !

தேடியதும் சொன்னேன்!
"எங்கிருந்தோ வருகிற 
ஊர்பேர் தெரியாத காற்று 
உன்னிடம் அனுமதி வாங்கிக்கொண்டா 
உன்னை வாழ வைக்கிறது ? 
"நானும் காற்று தான் அழகி ! 



Thursday, November 11, 2010

கடவுளுக்காகக் காத்திருக்கிறேன்


தோழியின் மீது காதல் !
தொலைந்து போனது 
தாய்மொழி வார்த்தைகள் !

தொலைவில் அவள் 
சென்றிடக்கூடுமென்று  
மறைந்தே கிடக்கிறது 
மனதிற்குள் அன்பு !

 சொன்னால் விதி  
என்ன ஆகும் ? 
சொல்லாமல் என் அன்பு 
எங்கு போகும் ?

ஒளித்து வைப்பதும் குற்றம் ! 
எடுத்துச் சொல்வதும் குற்றமெனில் ! 
எங்கு தான் போகும் 
அனாதையான அன்பு ?

யாரேனும் கடவுளைப் பார்த்தால் 
என்னிடம் வரச் சொல்லுங்கள் !
அவனை கட்டிப்போட்டுக் 
கேள்வி கேட்கவேண்டும்!