Friday, December 18, 2009

சிலிர்க்கிற நினைவுகள்

அன்று : 
கதை பேசிக்கொண்டு
தூரியாடிய சுகம் -

அது தண்ணீரில் எழுத்து ..!!

இன்று :

கட்டிலில் படுத்து
அதை நினைத்து
பார்க்கும் சுகம்.,

இது - இதயத்தில் கல்வெட்டு !!

கோபமில்லையேல் காதலில்லை





நீயும்நானும் வளர்த்த காதலை விட ,  நம் கோபங்கள் நமக்குள் வளர்த்த காதல் தான் அதிகம் 
என்னில் உன்னையும் , உன்னில் என்னையும் , பிரதிபலிக்கும் கண்ணாடி - கோபம்!! 


கோபப்படுகிற ஒவ்வொரு நொடியும் நம்மை நாம் அதிகமாய் புரிந்துகொண்டிருப்பதை உணர்  !

கோபமில்லையேல் காதலில்லை !

Thursday, December 17, 2009

கேள்வி இல்லா தேர்வு







                               கேள்வியை  நானும் கேட்கவில்லை,
                                      பதிலை  நீயும் சொல்லவில்லை .,
                                                         இருந்தும்
                                               முடிந்து விட்டது
                                                        நமக்கான
                                                   காதல் தேர்வு ..!!

கல்லறை கடிதம்

*இதோ .,
 இவள் .,
 திறக்காமலேயே
 கிழித்தெறிந்த
 என் காதல் கடிதத்தை ,
 ஓட்டுப் போட்டு
 வைத்திருக்கிறேன்!!


*என்னோடு  உயிரில்லாமல்நான்  
 மண்ணோடு மண்ணாகிப்
 போன பின்பு ,
 என் வலிகள் சுமந்த
 இவ்வெள்ளைத்தாளாவது
 உயிர் பெற்று வாழட்டும் ..!!

*என் உயிருக்கு நெருக்கமானவர் எவரேனும்  .,
  இதை என் கல்லறை மீது
  செதுக்கி வையுங்கள் .,

யாருக்கும் தெரியாமல்
அதை படித்து விட்டு
என்றாவது  ஓர்நாள்
காதலித்தாலும் காதலிப்பாள் - என்னை !!

பேதைப் பெண் !! பணக்காரக் காதலி !!

Friday, December 11, 2009

மரணத்தில் ஆறுதல்


சப்தமின்றி தோன்றிடும் உன்
அத்துனை வார்த்தைகளும்,

சொல்லமுடியாத உன் காதலை
சொல்லிக்கொண்டிருந்ததே!

திறக்காத உன்  இதழ்கள் கூட
திருடிவிட்டுப்போனதே -
என் இதயத்தை அன்று !

இன்று யார் களவாடியது ...??

எங்கே தொலைத்தாய் ?
எனக்கான உன் வாத்தைகளை ??

உன் வார்த்தைகள் கிடைக்காத போது
கண்ணீரில் ஆறுதல் தேடினேன்..,

இனி உன் மௌனங்களும்
கிடைக்காமல் போனால் மரணத்தில் தேடவோ ??
.
.
.
ஆறுதல் !!  மரணத்தில்  ஆறுதல்  

Nowadays i miss ur words di azhagi.!!
mis u so much