Thursday, September 30, 2010

அன்போடு சேர்ந்த சாபமும் வரமாம்!


காற்றும் கனவும் 
களவாடிய-அப்  பொழுதினில்
தெரிந்தோ தெரியாமலோ 
இழந்திருக்கிறேன் .,
உனக்காக நான் எழுதிய 
எத்தனையோ கவிதைகளை !  

ன்பு ராஜ்யத்தின் 
அழகு நீதியரசி - நீ !
அகப்பட்டேன் உன்கவிஞன் 
கூண்டில் குற்றவாளியாய் !

மன்றாடி நின்றேன் ! 
மன்னிக்கக் கேட்டேன் !

ன்பொருட்டு எனை 
மன்னித்தும் 
அவள் பொருட்டு என்மேல் 
சினந்தும் எழுதினாள்
இரண்டு தீர்ப்பு !

தீர்ப்பு ஒன்று : 
( The World's most lovable judgement i ever heard)

அணைத்தாள்! ஆர்ப்பரித்தாள்! 
அருகில் வந்து சொன்னாள் ....

விடு பிரபா..

"எழுதத் தெரியாதவன் தான் 
தொலைத்ததைத் தேடிக்கொண்டிருப்பான் என்றாள் !"

அடேயப்பா !
எவ்வளவு உண்மையான தீர்ப்பு !!

தீர்ப்பு எண் இரண்டு : 
 ( The worlds Most beautiful Imprecation i ever heard of)

சினந்தும் சிவந்தும் போன 
தாமரையாள் 
அழுது முடித்தொறு
சாபம் சொன்னாள்!
 
" என்னை எழுதித் தொலைத்தவரே! 
இன்று முதல் நீங்கள் 
என்னைத் தவிர வேறெதையும் 
எழுதப் போவதில்லை !" என்றாள்

பெண் சாபம் பொல்லாத சாபம் தான் ! 

ஆயிரம் தமிழ் தெரிந்திருந்தும்!
அழகி!.....
உன்னை எழுதும் போதும் தான் 
வார்த்தைகள் கவிதைகள் ஆகிறது..!!

Tuesday, September 21, 2010

என் முதல் காதல் கடிதம் :


நிலவின் மடியில் நிரந்தர ஜீவனாம்சம் கேட்டு ஒரு பேராசைக்காரன் எழுதுவது. நலம், நல செய்ய 
ஆவல் ..!
  
நகரும் நொடிகளை விட்டு நகராமல் நிற்கும் என் நினைவுகள், கொஞ்ச நாட்களாய் உன்னோடு சுற்றி திரிகிற விசை நீ சுவாசிக்காத உண்மை..!  எங்கெங்கோ பார்த்திருக்கிறேன்! எங்கோ தூரத்தில் நின்றிருக்கும் உன் அசைவுகளை எல்லாம் நான் ரசிக்கத் தவறிஇருக்கிறேன்  (இருட்டுக் கனவில் மட்டும்) ! 

எல்லா அழகையும் எட்டிப் பறித்த பூவைப் போலிருக்கும் மின்மினிப் பனிமலரே.. என்னழகி..   

நான்கிரண்டு வாழ்கை பொருத்தமும், நானும் நீயும் ஒரே சாதியும் , கட்டும் முறையோ கிராமத்து சொந்தமோ எல்லாம் இல்லை எதுவுமில்லை ..!  அப்படிக் கணக்குப் போட்டுக் காதலிக்கும் அன்பும் எனக்கு  பழக்கமே இல்லை .!  

உன் தேவைகளை என் ஆசைகளாக்கிக் கொள்ளத் தெரியும்...!! அவ்வளவு தான்!  

வேறெந்தத் தகுதியும் என்னிடம் இருப்பதாய் பெருமை பேசப்போவதில்லை நான்! 

 நீ அழகி ! நான் ????.... நான் அதை ரசிப்பவன்!... அவ்வளவே! 

எவ்வளவோ மீறியும் ஒரே  ஒரே ஒரு பேராசையை மட்டும் இதயத்தில் ரொம்ப நாட்களாய் ஒதுக்கியே சேர்த்து வைத்திருக்கிறேன்! ஆம்..,  

உன் பெயருக்குப் பின் என் பெயர் போடும் ஆசைதான் அந்தப் ( பெயர்  + ஆசை ) பேராசை !   

பேராசை தீர்க்கும் நூறுபிறை மதியே , அழகி...!! என் வார்த்தைகள் பிடித்திருப்பின் உன்னோடு இதை பத்திரப் படுத்திக்கொள்! வாழவும் பிடித்திருப்பின் என்னையும் சேர்த்துப் உன்னில் பத்திரப் படுத்திக்கொள்!! முடிந்து போகும் புள்ளியாய் இல்லாமல் தொடர்ந்து நீளும் தொடர்ப்புள்ளிகளாக விழைகிறேன். உன்னுள் !  முடிவில்லாத அன்பினை  பதிலாகவும்  எதிர்பார்க்கிறேன்! கசக்கிப் போட என் அன்பு ஒன்றும் காகிதப் பூவில்லை என்று அசட்டுத்தனமாக நம்பும் அன்பான தலைக்கணம் கொண்டவன் நான் ..!! 

என் எதிர்பார்ப்புத் திசுக்கள் யாவும் எதிர்காலம் உன் தோளில் தான் என்று சிரித்துக்கொண்டே ஆரூடம் சொல்கிறது ! 

  (ஒரு வேல என்னய கிண்டல் கிண்டல் பண்ணுதோ ? சரி இருக்கட்டும் !) சேதிக்கு வருவோம்!  

ஊருலகில் நிறைய காதல் கடிதங்கள் அனாதைகள் ஆக்கப்படும் சேதியை நீ படித்திருப்பாய் ! நம் பிள்ளைகளாவது இந்தக் கடிதத்தை படித்துப் பெருமிதம் கொள்ளட்டுமே!  

உண்மையான அன்பு , நிராகரிக்கப் படுவது நிசமான பொய்தானென்று  !! 

Love you azhagi ....!!

Tuesday, September 14, 2010

அகர அகராதியில் காதல்


ந்தமில்லா மெய்யுறைந்த 
அர்த்தமுள்ள ஆதியே 

ர் தந்த என் அத்தனை சுவாசமே, 
அழகி!

ன்றைக்கு இன்னொடியில் 
இதயத்தில் உதிரமாகத்தான் 
என்றைக்கோ எங்கிருந்தோ 
 வந்து சேர்ந்தாயோ வான்மதியே!

இருமதி சுமந்த
புருவத்தின் நிழற்குடைக்காரி !

டனோ ஏழையோ 
இந்தப் பித்தன் எப்படியோ ,
பிரபா ,
இன்பன் நீஎன்றால் 
ஈராட்டி நானென்றாய்! 

மையவள் தேவிஎன் 
அழகிநீ பார்வதி !

னைவந்து மேவியது
ஏ ழுசென்மப் புண்ணியமோ !?

கித்தேன் உனைதினமும்
ஒருநொடியும் விடவில்லை !

உயிர்மெய்யின் ஊசிவேரில்
ஒவ்வோரிடமும் நீதானே ..!!

கினன் எழுதிய எழுதாக்கிளவியே !
அன்பிற்கும் அழகிற்கும் 
அத்தனைக்கும் நீதாண்டி!!

சிநீ! என்னவள் நீ !
 எதைநான்சொல்வேனோ 
அதைநீயும் சொல்லிடுவாய்!

துநீ ! ஐஞ்ஞைநீ!
ஐந்தாம் வேதம் 
காணாத அழகி நீ!

ட்டினர் எல்லாம் 
போற்றிடும் பெண்மைநீ !
ஒப்பில்லா ஒருமதிநீ 
உண்மையான அன்பழகி!

தியுரைந்து வேண்டினாலும் 
ஒருநூறு உலகம் தேடினாலும் ,
ஒருவர்க்கும் எட்டாத அன்புசாமி - நீ!

எனக்குமட்டும் கிடைத்த
என்னழகு செல்லக் கிறுக்கி!

வியம் பேசாதோர்
யார்தான் எவர்தான் !
அழகு தேசத்து மகராணிநீ! 
அடியேன் கிறுக்கன் 
என்னைப்போய் காதலித்தாய்!

தாவது  என் அன்பு செய்தப் புண்ணியம் !
  
* * * * * * * 
    அகராதி :   
* * * * * * *
 ர் - காற்று ,

டன் - பணக்காரன் , செல்வந்தன்

இன்பன் - கணவன் ,
 
ஈராட்டி - மனைவி  ,

மேவியது -ஆசைப்பட்டது ,

ஊகி - எண்ணுதல் , நினைத்தல்

ஊசிவேர் - ஆணிவேர்  (rootlet),

கினன் - பிரம்மன்  (lord brahmma),

எழுதாக்கிளவி- வேதம், 

சி- கிளி (parrot),

ஐது, ஐஞ்ஞை- அழகி, (beauty),

வியம் - பொறாமை,

Wednesday, September 1, 2010

அழகி எழுதிய முதற் கவிதை

 ஏற்றமும் இரக்கமும்
மாற்றமும் வேண்டாம்

கோடியும் லட்சமும்
கொஞ்சமும் வேண்டாம்

சதையில் வேண்டாம்
சிவப்போ வெளுப்போ

சாதியிலும் வேண்டாம்
உயர்வோ தாழ்வோ

ஆறடி நீயோ
அரைஒன்று குறையோ

எப்படி இந்நொடி
இருக்கிறாய் நீயோ

அப்படி வேண்டும்
அத்தனை பிறப்பும் !

அரண்மனைப் பிறப்போ,
அனாதைப் பிறப்போ

எங்கு எப்படி
என்னிலை நானோ

எல்லாம் இழப்பேன்
எல்லாம் இழப்பேன்

சோறு வேண்டாம்
சுகம் வேண்டாம்

சொந்த பந்தம்
ஒன்று வேண்டாம்

அன்பு போதும்
அது போதும்!

எத்தனை பிறப்போ 
அத்தனை பிறப்பும் - நீ

அழகி அழகி
என்-றழைப்பது போதும்

அன்புக்கிருக்கா  
அழகுக்கிருக்கா .,

உன்னுடன் இருப்பது
நொடியோ நிமிடமோ
வாரமோ வருடமோ

ஒருசுகம் போதும்- நீ 
ஒருவனே போதும்

உன் தோளில் 
வெண்ணிலவாய்
உனக்கொருத்தி
நான் போதும் ..!!

என்நெஞ்சில்
ஒன்றோடொன்றாய்
உறவாட ஒரு சேய்
நீ போதும் பிரபா ...!!

Thanx for your wonderful lines azhagi..!!