Thursday, December 29, 2011

ஜிம்மியும் காதலும் . . . .


மழையையும் மரங்களையும்
நாய்க்குட்டிகளையும்,
ஆட்டுக்குட்டிகளையும்,
குருவிகளையும் , குயில்களையும்,
பார்பி பொம்மைகளையும் ,
பஞ்சுமுட்டாய்களையும் மட்டுமே
ஒரு தரப்புப் பெண்கள்
ரசித்துக் கொண்டிருக்க,

இன்னொரு பக்கம் நீ மனிதர்களை
நேசிப்பதற்கே நேரமில்லை என்கிறாய் !,
பிடித்து வைத்தும்
அடங்க மறுத்துப்போகிற நெஞ்சோ
இதைப் பிடித்துப்போய்
உனை வந்து சேர்ந்தது !

இன்று , நீயும் உன் அன்பிற்கும் முன்
மழையோ , மின்னலோ ,
ஆட்டுக்குட்டியோ, நாய்க்குட்டியோ
எனக்கு ஒருபோதும்
அழகாகத் தெரிவதே இல்லை அழகி!
உன்னை நேசிப்பதற்கே நேரம்
சரியாய் போகிறதடி !

Thursday, November 17, 2011

காதலுக்கென்றே படைக்கப் பட்ட வரங்கள்


இருவர் மீதும் தவறுகளிருந்தும் , 
இருவர்க்கும் அது தெரிந்திரிந்தும், 

என் தவறுகளை நீ 
உன் நம்பிக்கையில் மறைப்பதும் !
உன் தவறுகளை நான் 
என் நம்பிக்கையில் மறைப்பதும்! 
 படைத்த சாமிக்கே 
கிடைக்கப் பெறாத வரம்  ! 

சினந்து சிவக்காத பெண்களும் ,அதைப் 
புரிந்து அணைக்காத ஆண்களும் 
காதலுக்கென்றே எழுதப்பட்ட 
சாபங்களாய் இருக்கையில் ! 

நீ சினந்து சிவக்கிறாய் ! 
நான் புரிந்து அணைக்கிறேன் ! 
♥ நாம்தான் காதலுக்கென்றே 
படைக்கப் பட்ட உண்மையான 
வரங்கள் அழகி !


The kinda trust which binds us is 
a heavenly treasure !
 I jus love it ♥ 

Sunday, October 23, 2011

ஒரு முத்தமும் ஒரு லட்சம் சந்தேகங்களும்


ஏதும் பேசாதவனாய் 
எத்தனையோ மணிநேரம் 
உன் கன்னங்களைப் 
பார்த்துக்கொண்டு மட்டும் 
இருந்திருக்கிறேன் !
 
"முதல் முத்தத்திற்கு 
முன்னும் பின்னும் தோன்றிய 
மூவாயிரம் சந்தேகங்கள்"
என்றொரு புத்தகமே எழுதலாம்! 
 அத்தனை பயம் ! 
அதற்குமேல் காதல்! 

முதல் முத்தமின்று 
மூன்று கோடியை எட்டியிருக்கும்.., 
நகர்ந்தோடிய நிமிஷங்களில்
நாம் பகிர்ந்துகொண்ட
ஈரங்களும் காய்ந்திருக்கும்! 

அன்றிலிருந்து இன்றுவரை,
என்றெழுத அமர்ந்தாலும் 
தாள்களை முத்தமிட்ட 
மை'யும்  காதலும் 
கவிதையாய் மாறியிருக்கும் ! 
நாள்களைச் சேர்த்து 
நிமிஷங்கள் ஜென்மமானாலும் 
நம் அன்பு மட்டும் 
என்றுமே மாறுவதில்லை அழகி !... 

Happy that Such an enduring green luv is ours

Wednesday, August 3, 2011

ஒரு பூ சிரிக்கிறது


அதிகமாக மலரை நேசிக்கிறவர்கள் 
அதைச் செடியிலேயே 
சிரிக்க விடுகிறார்கள் ! 

அழகி !,
நீ மலரில்லை என்று சொன்னாலும் 
அதைஊர் நம்பப் போவதில்லை !

நான் உனைப் பறித்துக் கொண்டுவிட்டேன் 
என்று சொன்னாலும் 
அது உண்மையாகப் போவதில்லை !

எங்கோ இருக்கிறாய் ! 
என்னமோ செய்கிறாய் !

இன்னும் நீ செடியில் பூதான் !
அழகி !
எங்கோ நீ 
சிரித்துக் கொண்டே இரு !
இங்கே  நான்
ரசித்துக் கொண்டே இருக்கிறேன் !

இந்தக் கவிதையும்  அன்புமே  
நம் காதல் வரலாறெழுதும் !
 L o v e  Y o u  A z h a g i !

Monday, July 11, 2011

எது காதல் ?

அரங்கேற்றம் தொடங்கட்டும் !
ஓடிப்போய் நீ எங்கோ ஒளிந்துகொள் !
உனக்கெதிரில் நானெங்கோ
ஒளிந்து கொள்கிறேன் !

என்னைக் கண்டுபிடித்தால்
நீயும் சொல்லவேண்டாம் !
உன்னைக் கண்டுபிடித்தால்
நானும் சொல்லிடமாட்டேன் !

ஞாபகம் வைத்துக் கண்டுபிடித்து
விளையாடிக் கொண்டிருந்தது ஊர் !
நாமோ கண்டுபிடித்து மறந்து
விளையாட வேண்டிய நிலைமை !

பொல்லாத காதல் விளையாட்டில் 
பொழுது சாய்ந்தால் ஒரு விதி 
விழித்து எழுந்தால் ஒரு விதியா ? !
எவன்தான் செய்கிறான்
காதலர்களுக்கு இப்படி விதி ?

நேற்று, பொழுதுக்கும் என் பெயரை
காற்றில் வாசித்தவள் !
இன்று கற்பனையில் கூட வாசிக்காமல்
போன வழி எங்கே ?

எத்தனையோ அன்பினை படித்து முடித்து
எது காதலென்று மறந்து
போகும் நிலைக்குப் பெயர் தான்
ஒருவேளை காதலில் டாக்டர் பட்டமோ !?

Friday, May 20, 2011

நேற்றடித்த மழையில்...


நேற்றடித்த ஆசைமழையில் 
 இன்றெழுந்த எல்லாம் காதலாம் !
பார்க்க முடிகிற அன்பிலும் 
கேட்க நேர்கிற காதலிலும் 
உணர முடிகிற உண்மைகள் யாவிலும்
உடல்களின்  வாசமே
உண்மைப் பிரதானம் !
அது காதலாம்! 
ஓஹோ !

அப்படியானால் இதற்குப் பெயர் என்ன ? 
கனவில் விதி எழுதி ,
நினைவில் உணர்வெழுதி,
நீ எங்கோ நான் எங்கோ 
சென்றுவிட்ட போதும் ,
காற்றில் அன்பெழுதி 
சப்தமிட்டு வாசிக்கிறேன் !
அதைநீ  முத்தமிட்டு நேசிக்கிறாய் !

தோள் இல்லை - நான் 
சாய்ந்துகொண்டுதா  னிருக்கிறேன்-உன் 
மடியில்லை - நான் 
தூங்கிக் கொண்டுதா னிருக்கிறேன் ! 

விதியை மீறி விண்ணை எட்டிய 
நம் உணர்வுகள் இன்று !
நட்சத்திரங்களுக்கு நடுவினில்
உலவிக் கொண்டிருக்கும் காற்றோடு 
கைகோர்த்து காதலித்துக் கொண்டிருக்கிறது !

இதை விட ஒரு பெரிய காதலை
நான் பார்த்ததில்லை அழகி !

Thanx, that you are here to accredit my love ! 
Love you so much !

Monday, February 28, 2011

காதல் 25 - The Refined Definitions

பூக்களின் நடுவினில் பயணம் போகிறேன் !
உன் புன்னகை நிறம் மஞ்சலென உணர்கிறேன் !
இது காதல் !




* நாம் கட்டியணைத்துக்  கொள்ளும் போது,
இடையினில் நிறைந்திருக்கும்
அத்தனைக் காற்றிற்குள்ளும்
ஒளிந்திருப்பது காதல் !
ஒளித்து வைத்தது நாம்!



  இரு வேறு தீச்சுடரின் கோபம் - காதல் !
ஒன்றும் இன்னொன்றும் எரிகிற வேலையில்
பளிச்சிடும் ஒளியில்
மிளிர்வது காதல் !
 

நீ ஏமாந்திருக்கும் வேலையில் உன்
பின்னின்று
உச்சந்தலையில்
முத்தமிடுவது காதல்!


* உன்னை சுவாசித்து
என்னை வெளியேற்றும்
செயல் காதல் !


* என்னைப் பிடிக்குமா என்று நீ
கேள்வி கேட்பது காதல் ,
"பிடிக்கவே பிடிக்காது" என்று நான்
பதில் சொல்வது
காதலோ காதல் !


* ஊருக்கு நாம் எப்படியோ ?
உனக்கு நான் அழகு !
எனக்கு நீ அழகோ அழகு !
இது காதல் !


கவிதை எழுதத் தெரியாதவன்
எழுதிக் கிழிக்கும்
அத்தனை காகிதங்களுகுள்ளும்
எத்தனையோ காதல்
செத்துக் கிடக்கிறது !
உண்மை எதுவோ .,
அதை சொல்ல முடியாத
வார்த்தைகளில் ஒளிந்திருப்பது
காதல் !



என்னைப் பிரிவதற்கு நீ போட்ட
அத்தனை  நாடகங்களிலும்
கதாநாயகியை காமெடியன் வென்றான் !
அது நான் !
அது காதல் !


நான் உன் அளவிற்கு அழகில்லை
என்று புலம்புவது காதல் !
" சோ வாட்" என்று நீ
சூப்பராய் பதில் சொல்வது 
காதலோ காதல் !


என் இரு கைகளையும்
இணைத்துப் பார்க்கிறேன் !
இதய வடிவம் சரியாய்
வர மறுக்கிறது !
"அடப்போடா" என்று
கவலைப்படுவது காதல்!


 காமத்திற்கும் அன்பிற்கும் இடையில்
ஊர் வாயில் சிக்கித்
தவித்துக் கொண்டிருக்கும்
அத்தனையும் காதல் !
அது பாவம் !


நீ எனக்கானவள் இல்லை
என்ற போதும்
உன்மீது கொண்ட அன்பில்
நிலைத்தே இருப்பது
நிசமான காதல் !


உன்னைப் பெற்றவர்களிடம்:
" பூமியில் எங்கும் இலாத அன்பை
நான் மட்டுமே உங்கள் மகளுக்குக்
கொடுக்க முடிந்தவன்"
என்று சொல்லியே தீருவேன்
இந்த இனிமையான தலைகனத்தில்
நிறைந்திருப்பது
அத்தனையும் காதல் !
காதலுக்குள் அன்பு ! 



* நிறைவான காதலில்
நிறைந்திருப்பது காதல் !
நிறைவான காமத்திலும்
கலந்திருப்பது காதலே !



* உணர்வுகள் உணர்ச்சிகளை
அன்பால் கொல்கிறது !
அது காதல் !


* கலைந்து கிடக்கும் மேகக்
கூட்டங்களில்
ஹார்ட்டின்  சின்னங்களை
தேடுவது காதல் !



* ஒரு சராசரி ஆணாய்
உன் உடல் பிடிக்கும் !
ஏன் என்று கேள் !
என்னை சுமக்கிற
இதயத்தை சுமப்பது
உன் உடல் தானே ?!
அது காதல் !


என் கைகளில் உன் பெயரை எழுதிப்
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்!
உன் கைகளில் என் பெயரை
எழுதிக் கொண்டு சிரித்துக் கொண்டே
இருக்கிறாய் !
என் அன்பிற்குப் பெயர் காதல் !
உன் பைத்தியகாரத் தனத்திற்கும்
பெயர் காதலே!



* இருப்பது நினைவிலோ கனவிலோ ..
பேனா கிடைத்தால்
என்னை மறந்து உன் பெயரை
கிறுக்கி தள்ளுவது காதல் !



கறுப்புக் கலர் கைகளில்
ஒளிந்திருக்கும் அன்பையும் ஈரத்தையும்
வெள்ளைக் கலர் கைகள்
கண்டுபிடித்து ரசித்தால் !
அந்த விளையாட்டிற்கு
காதல் என்று பெயர் !



* நீ யாரென்றே தெரியாத போதிலும் கூட
உனக்காகநான் விடும்
ஒரே ஒரு சொட்டுக் கண்ணீரில்
ஓராயிரம் டன் அன்பு
ஒளிந்து கிடக்கும் ! 
அது காதல் !


 


* என் கால்களில் நீ
ஏறி நிற்க நினைப்பது காதல் !
இனிமையான சுமையைத் தாங்கி
நான் சிரித்துக் கொண்டிருப்பது
காதல் !


 

* நீ வேறு திசை நான் வேறு திசை
போன போதிலும்
நாம் நம் ஸ்வாசங்களுக்குள் சத்தம்போட்டு
முத்தமிட்டுக் கொள்வது காதல் !



உன் பெயரெழுதி பக்கத்தில்
என்பெயர் எழுதுவது
காதல் !
அதை அடித்துபோட்டுக் கிழித்துப்
போட்டதற்குப் பெயர்
வாழ்க்கை !


PENNED BY KARUR PRABHAKARAN



Sunday, February 6, 2011

64X காதல்


கவிதைகள் தூங்கிபோகிற நேரங்களில்
காதலும் என்னுள் தூங்கிப் போகிறது !

உயிர்கள் தூங்கிப் போகிற நேரங்களில்
உண்மையும் அதற்குள்ளே தூங்கிப் போவது 
என்ன நியாயம் ?

அப்ஜெக்ஷன் மை காதலி !

பட்டுப் போன என் உணர்வுகளுக்கு
பட்டாம்பூச்சி சிறகுகள் வேண்டும் !

விட்டுப்போன கவிதைகளை
ஒட்டுமொத்தமாய் எழுதி முடிக்க
ஒன்று செய் !

மறுபடியும் என்னை தம்பி என்றழை !
அங்கு தானே நம் காதல் தொடங்கியது !


Sunday, January 16, 2011

பூங்கதவே தாழ்திறவாய்

காதல் காதல் என்றெழுதிக்
கவிஞனானேன் !  
அன்பு அன்பென்று சொல்லி
மனிதனானேன் ! 

ஆசையின் வழி - அட்டகாசம் !
வெறித்துத் தவிர்த்தேன் !

அன்பிற்கு வழி - அடர்காடு !
விரும்பி நுழைந்தேன் !

கத்துவதும் கதறுவதும் 
கைநீட்டிக் கெஞ்சிக் கொண்டும்   
வந்து விட்டேன்...
பாதித் தொலைவு !
மீதிக் கவிதை எழுத நேரமில்லை... !
யாரேனும் என் 
கவிதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து 
உங்கள் 
காதலிடம் கூட்டிச் செல்லுங்கள்  !!


Sunday, January 9, 2011

காதல் VS காமம் : The Exact Perspective :


உணர்த்த முடியாத அன்பினை 
உடல்கள் பேசிப் புரிந்துகொள்வது 
காமம் !
உணர்த்த முடிகிற அன்பினை 
இதழ்கள் பேசிப் புரிந்து கொள்வது 
காதல் !!
இதற்கு மேல் நான் என்ன சொல்ல ?