Saturday, September 29, 2012

எப்படி நீயோ அப்படி நிலவு - 20 குட்டிக் கவிதைகள்

01


மன்னித்துவிடு
என நீ கேட்கும்
போது
மரணித்து
விடலாம்
போலிருக்கிறது !
நான்
கொண்டிருந்த
கோபத்தை
எல்லாம்
கொன்றிடலாம்
போலிருக்கிறது !
When you are sorry,
I almost feel like Killing my anger out of my heart.
02


எங்கிருந்தோ 
வந்துஎன் 
செந்நிறக் 
குருதியில் 
திடுமென 
நீ ஆர்ப்பரிக்கும் போது 
தலைக்கும்
காலுக்குமிடையில்
தறிகெட்டு
ஓடுகிறது
காதல் வெள்ளம் !
Gushing stream of You, fills my heart everywhere.
Then, Its like a "PLETHORA of YOU" fills me in.
03


அன்பின்
உச்சி கோபுரம் 
சாமி என்றால்
நீ என் சாமி !
இல்லை 
விஞ்ஞானிகள்
நாளை ஏதேனும்
புதுசாய்க்
கண்டறிந்தால்
அதுவும்
எனக்கு நீ !
அதற்கு
மேலும் நீயே !
The Greatest findings of science cum spiritualism
is 'YOU' for me
04


ஆங்கே 
கரையோரத்தில் 
அமைதியாய்
கிடக்கிறேன் !
அடித்திழுத்துப் 
போகிறாய் 
அன்பின் 
பெருவெள்ளம் நீ !
கைகட்டி 
வாய்பொத்திக்
கூடவே
வருகிறேன் !
அது வரம் !
அதற்குமேல்
எனக்கென்ன
வேண்டும்?
அது வரம்
அது போதும் !
# To the world's most 
ravishing pretty gurl - Azhagi ! ♥

05


எந்தத் 
திருவிழாவும்
அத்தனை 
விமரிசையாய் 
கொண்டாடப்
படுவதில்லை...
என்னை நீயும்
உன்னை நானும் 
கொண்டாடுவதைப்
போல !
You are the Soul-filled Colorful Festival
that I have ever celeberated ... ♥

06

என்மேல்
கோபப்படு ;
சுடுசொல்லாய் 
வீசி ஏறி ;
பிரிந்து போ ; 
பேசாமலிரு ; 
அழவை ; 
ஏங்கவை ; 
இதில் 
எதையாவது
செய்து தொலை !
உன்னோடு
இருந்து இருந்து
எனக்கு
இதெல்லாம்
என்னவென்று
மறந்துகொண்டே
இருக்கிறது ! :)
You fill my heart so nicely,
that I have forgotten the meaning
of what is so called 'WORRIES'
07


தோன்றி
மறையும் 
மாய
நாடகத்தில்,
அன்பென்னும்
கதாப்'பாத்திரத்தில், 
நாம் பொங்கி 
வழியவேண்டும் !
Here goes, the Chronicle of the Thamizh Letters :
அ - ஆதி ;
ன் - அந்தம் ;
ப் : பாத்திர வடிவத்தை கொண்டுள்ள - 'ப்' - நம் உடல் ,
உ - உயிர் !
அ + ன் + பு !
That's Wat, the Entire life Deals with ... ! Love ! ♥

08


ஆழிவெள்ளப்
பாசக்காரி 

அன்பின் 
பிள்ளையார் சுழி 

அழவைக்கும்
குட்டிப் பிசாசு 

கோபப்பட
வைக்கும்
பைத்தியக்காரி

கொஞ்சிக்
கிறங்கடிக்கும்
வெள்ளிவண்ண
தேவதை

பேசவைக்கும்
மூச்சுக் காற்று

பேசாமல்
கொல்லும்
மௌனக்கள்ளி

சிரித்துக் கதை
பேசும் நடமாடும்
நிலவு !

சில்லெனக்
குளிர்கிற
வெள்ளை
மழைத்துளி !

"ம்" எனும்
நொடியில்
ஜனிக்கும்
கவிதை !

இப்போதைக்கு
இவ்வளவு தான்..
எல்லாம் நீ தான் !
நீதான் எல்லாம் !
Pretty chirpy "Hmm" Sound of you
is almost like a heaven to me 
09


ஏதும் பேசாமல்
என் தோள் சாய்ந்துகிடக்கிறாய்...
இதற்காக மட்டும்
தனியாக ஒரு
பிறப்பெடுக்க 
வேண்டும்
போலிருக்கிறது.
அழகி!

You are lying on my shoulders
Should I find any other valid reason to dwell in ?
10


எதையோ 
பேசிக்கொண்டிருக்கும்
போது
இடையில்
குறுக்கிட்டு
நான் சொல்லும்
லவ்யூ'வை
நீ கண்டுகொள்ளாததைப்
போல் கடந்து 
செல்வது
என்னை
இன்னொரு தடவை
சொல்ல வைக்கும்
யுக்திகளில்
ஒன்றாகத் தான்
இருக்கும்
When I Interrupt you between 
the unstoppable chat , 
and Kiss you a love you. 
You will act like you didn't notice it.
I know , its the trick to get one 
more love you from ME ! <3 span="span">
11


ஆயிரம்
கவிதைகள்
எழுத
நேரம் கிடைத்தும் 
ஏதும் செய்யாமல் 
உன்னைப் 
பார்த்துக்கொண்டு
மட்டும் இருந்தேன் !
நெஞ்செல்லாம்
கவிதையாய்
நிரம்பி
வழிந்தோட
வழியில்லாமல்
மூச்சு முட்டிப்
போனது !
When I get time to write even Thousand poems.
I choose not to do it. and I simply Stare at you.
 accumulated poems overflows the heart.
12


நீ கொட்டும் 
'ம்ம்' எல்லாம்
என் செவிவழி 
நுழைந்து
இதயத்தில் 
தங்கிக்கொண்டு
இரவானால்
நட்சத்திரங்களாகி
மின்னிச்சிரிக்கிறது!
நானும் 
'ம்ம் ம்ம்'
சிரி சிரியென்று
ரசித்துக்கிடப்பேன்!
# awesome poems ur 'hmm's are!
ardent fan of those , I am!

13

பூமியில்
எல்லாம்
நாடகமென்று
தோன்றும் போது...
நீயும் உன் 
அன்பும்
நிஜமென்று
கொஞ்சநேரம்
சொல்லிக்கொண்டிருப்பேன்! 
நெஞ்சு கொஞ்சம்
நிசப்தத்தில்
இளைப்பாறும்!

You are the top most Virtue and Truth that Exists in the world
Which I surrender when I have no hope Left for living.
14


இயற்கை 
எழுதிவைத்த 
அழிக்கமுடியாத
விதி
காதல் !
நரம்புகளில்
குருதியில்
திசுக்களில்
எங்கே நீ 
இல்லை என
மறுத்தாலும்
அங்கெல்லாம்
வாழ்கிறது
காதல் !
Into the nerves, Deep inside the tissues
Lives the LOVE <3 p="p">
15


ஹ்ம்ம் ! 
நிலா
இன்று 
அழகாகத் 
தான்
இருக்கிறது
நீ
என்னை
பார்க்கச்
சொன்னதும் !

Moon Looks pretty more luminous,
When YOU asks me to see it.
16

Chemistry of Love : 

காதல் வேதியல் : 
டெஸ்ட்டோஸ்டீரோ'னும் 
ஈஸ்ட்ரோஜென்'னும் 
சேர்ந்து 
உன்னை 
என் கண்களுக்கு 
அழகு தேவதையாக்கிக்
காட்டினார்கள் ...
ரசித்தேன் !

அட்ரினலின்,
டோபமைன்,
செரட்டோனின்,
மூவரும் சேர்ந்து
எனக்குள்
பிரியத்தை
விதைத்தார்கள்...
பிரிய முடியாமல்
காதலிக்கத்
துவங்கினேன்!

ஆக்சிடோசினும்
வேசோபிரஸ்சினும்
நம் மூளைக்குள்
முத்தமிட்டு
கொள்ளட்டுமென்று
காத்திருக்கிறேன்...

ஊடல் கூடல்
கடந்து
காதல் வேதிப்
பொருள்கள்
நம்மை காலத்திற்கும்
கூடவே
வைத்திருக்கட்டும் ...
நாம் வாழ்க !
நம் காதல் வாழ்க !
Read about the above Harmon-es to 
get the intense meaning of the poem.
17


என்
வரம்
எதுவென்று
எங்கேயோ
தேடத் தேட
ஒரு குரல்
கேட்டுத்
திரும்பி
நின்றால்
நீ நான் நானென்று
சிரித்துக்
கொண்டிருக்கிறாய் !
♪ அட நீதானா
அந்தக் குயில் ♪

In the search of my Boon, an Instant voice hit me
with its chiseled coolness and when I turn to it
I See YOU ! Wao ! <3 it="it" love="love" span="span">
18


உன் தேவை 
நானாக 
இருக்கவேண்டும்
என்பதைத் 
தவிர 
என்தேவை 
வேறேதும் 
இல்லை !
Sort of world's sweetest selfishness !

19

மன்னித்துவிடு
என எத்தனையோ 
முறை
கேட்பதற்கு 
பதிலாக 
என் பெயர் 
சொல்லி 
ஒரு முறை 
அழை ..
இன்னும்
கொஞ்சம்
நேசிப்பேன்...
கொஞ்சம்
நிறையவே
நேசிப்பேன் !
Instead of being sorry, Call me by my name.
I will be chilled out then.
Its the cheapest trick ,
 by which my heart can be bought for.
20



எது
பேருண்மை 
என 
மதிப்பிட்டால் 
நூற்றுக்கு
தொண்ணூறு 
பெரும் அன்பு !
எதுவுமே 
நூறில்லை
எனினும்
அன்பே -
உண்மையின்
உயர்நிலை !
Top point of world
and profoundness 
sticked with it is
what we call
as 
.L.O.V.E.