Sunday, November 15, 2009

நிழலாகும் நிலவு


ஏதுமில்லா பகலிலும் இரவிலும் ,
எல்லாவுமாய் வந்த முழுமை -நீ !


அழுகை மட்டும் பழகிய உதட்டில்
புன்னகை விதைகளை விதைத்த அன்னை !!- நீ !


சோகம் மட்டுமே சுமந்திருந்த வயிற்றில்,
சுகங்களையும் சுமந்து கொண்டிருக்கிறாள் - என்
கவிதை புத்தகத் தாய் !


நிலவு மட்டும் நிறைந்திருந்த வானத்தில்,
நீ வந்தது முதல் நிலவு நிழலானது !!


சினங்களை சலிக்காமல் வெளிப்படுத்தும் என்
பழக்கங்களை , உன்
ஈர உதட்டின் இனிய முத்தங்களால் மாற்றியவள் ! நீ!!


வார்த்தை வாராமல் அழுது , மறுகனம்
வார்த்தை வராமல் சிரிக்க வைக்க யாரால் முடியும் ..!!?


வயிற்றில் சுமக்க விதியில்லாமல் , இதயத்திலேயே  என்
குழந்தையை சுமந்துகொண்டிருக்கும்
உன் ஒருத்தியால் மட்டுமே முடியுமடி!!! - என்
அத்தனை துடிப்பிற்கும் மொத்தமான சொந்தக்காரியே !!


Love u azhagi !!

No comments:

Post a Comment