காற்றும் கனவும் 
களவாடிய-அப்  பொழுதினில்
தெரிந்தோ தெரியாமலோ 
இழந்திருக்கிறேன் .,
உனக்காக நான் எழுதிய 
எத்தனையோ கவிதைகளை !  
அன்பு ராஜ்யத்தின் 
அழகு நீதியரசி - நீ !
அகப்பட்டேன் உன்கவிஞன் 
கூண்டில்  குற்றவாளியாய் ! 
மன்றாடி நின்றேன் ! 
மன்னிக்கக் கேட்டேன் !
என்பொருட்டு எனை
மன்னித்தும் 
அவள் பொருட்டு என்மேல் 
சினந்தும் எழுதினாள்
இரண்டு தீர்ப்பு !
தீர்ப்பு ஒன்று : 
( The World's most lovable judgement i ever heard)
அணைத்தாள்! ஆர்ப்பரித்தாள்! 
அருகில் வந்து சொன்னாள் ....
விடு பிரபா..
"எழுதத் தெரியாதவன் தான் 
தொலைத்ததைத் தேடிக்கொண்டிருப்பான் என்றாள் !"
அடேயப்பா !  
எவ்வளவு உண்மையான தீர்ப்பு !!
தீர்ப்பு எண் இரண்டு : 
 ( The worlds Most beautiful Imprecation i ever heard of)
சினந்தும் சிவந்தும் போன 
தாமரையாள்   
அழுது முடித்தொறு  
சாபம் சொன்னாள்!
" என்னை எழுதித் தொலைத்தவரே! 
இன்று முதல் நீங்கள் 
என்னைத் தவிர வேறெதையும் 
எழுதப் போவதில்லை !" என்றாள்
பெண் சாபம் பொல்லாத சாபம் தான் ! 
ஆயிரம் தமிழ் தெரிந்திருந்தும்!
அழகி!.....
உன்னை எழுதும் போதும் தான் 
வார்த்தைகள் கவிதைகள் ஆகிறது..!!



